Thursday 13 August 2020


ஒப்பந்த ஊழியர் ஊதியமும்... தீர்ப்பும்...

ஒப்பந்த ஊழியர்களின் கூலி கடந்த ஓராண்டாக வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் கொடுமை அனைவரும் அறிந்ததே. இந்தக்கொடுமை எதிர்த்து நமது ஒப்பந்த ஊழியர் சங்கமான TMTCLU அதன் பொதுச்செயலர் தோழர்.செல்வம் அவர்களின் முயற்சியால் வழக்கறிஞரும் நமது தோழருமான N.K.சீனுவாசன் அவர்கள் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. பலநாள் விசாரணைக்குப்பின் நேற்று 13/08/2020 மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஒப்பந்த ஊழியர்களுக்கு 30 சத ஊதியம் வழங்கப்பட்டதாக வழக்கம் போலவே நிர்வாகத்தின் சார்பில் நெஞ்சாரப் பொய் சொல்லப்பட்டது. இதைக் கேட்டுக் கேட்டு நீதிமன்ற வளாகக் காதுகள் வழக்கம் போலவே நேற்றும் புளித்துப்போயின.
எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நமது தரப்பில் 
கீழ்க்கண்ட வாதங்கள் முன் வைக்கப்பட்டன.


  • 30 சத ஊதியம் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்திரவு  BSNL நிர்வாகத்தால் நிறைவேற்றப்படவில்லை.
  • 30 சதம் போக மீதமுள்ள 70 சத ஊதியமும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
  • EPF மற்றும் ESI போன்றவை ஒப்பந்த ஊழியர்களின் வரவில் முறையாக செலுத்தப்படவில்லை.
  • தொழிலாளர் நல ஆணைய அதிகாரி நியமிக்கப்பட்டு அவர் மூலம் முறையான அறிக்கை பெறப்பட வேண்டும்
  • கொரோனா பொதுமுடக்கத்தின் போது ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பும் கொடுமை நிறுத்தப்பட வேண்டும்.

  
மாலையில் நடந்த அமர்வில் மாண்புமிகு நீதிபதி
 அவர்கள் கீழ்க்கண்ட உத்திரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
  • BSNL  நிர்வாகம் ஏற்கனவே நீதிமன்றத்தில் கேட்ட அவகாசமான 8 மாதங்கள் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகின்றது. எனவே அனைத்து நிலுவை ஊதியமும் செப்டம்பர் மாதத்திற்குள் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.
  • 30 சத பட்டுவாடா செய்யப்பட்ட சான்றுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • தொழிலாளர் நல ஆணைய அதிகாரி நியமிக்கப்பட்டு அவர் ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்பட்ட தொகை எவ்வளவு? ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தொகை எவ்வளவு என்ற விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • EPF மற்றும் ESI செலுத்தப்பட்ட விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேற்கண்ட துறை அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.
  • பொது முடக்க காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் அவர்கள் பணிசெய்த ஒப்பந்தகாரர்கள் ஆகியோரின் விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்ப்ட வேண்டும்.

தோழர்களே..
வாழ்வு முடங்கிப்போன ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சினைகள் தீர்ந்திட
இந்த பொதுமுடக்க காலத்திலும்...
மனம் தளராது நீதிமன்றம் சென்று நியாயம் பிறந்திடப் பாடுபட்ட
ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்திற்கும்... வழக்கை எடுத்துரைத்து நியாயம் கிடைக்கச்செய்த தோழர். NKS  அவர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment