Friday 1 September 2017

அனிதா... கலைக்கப்பட்ட கனவு… 
மருத்துவப் படிப்பு கலைந்தது... மரணம் அழைத்தது...
மோசமான ஒரு  சமூகத்தில்..
தற்கொலைகள் உற்பத்தி செய்யப்படும்….
என்றார் கார்ல் மார்க்ஸ்…

இதோ…
இந்தியதேசத்தில்…
எண்ணற்ற தற்கொலைகள்
உற்பத்தி செய்யப்படுகின்றன….

அதில் உச்சக்கட்டம்தான்..
நீட் தேர்வால்..
மருத்துவப்படிப்புக் கனவு கலைந்த…
மாணவி அனிதாவின் தற்கொலை…

இது தற்கொலையல்ல… கொலை…
ஒரு சமூகத்தின் மீதான கொலை….
ஒரு இனத்தின் மீதான கொலை…

மருத்துவராகி…
எண்ணற்ற உயிர்களைக்
காக்க வேண்டிய ஒரு உயிர்..
இன்று மரித்து விட்டது…

இந்த தேசத்தில்…
வசிப்பது அரிது…
மரிப்பது மட்டுமே எளிது….

நீட்தேர்வை ரத்து செய்வோம் என
நீட்டி முழக்கினார்கள்…
நெட்டைப் புலம்பல்கள்…

சாக வேண்டியது…
அனிதாக்கள்  அல்ல…
மானங்கெட்டு வாழும்…
அதிகார வர்க்கமும்…
அரசியல்வாதிகளும்தான்…

சொரணை கெட்ட சமூகத்தில்…
சொரணையோடு வாழ்ந்து மறைந்த…

அனிதாவிற்கு நமது அஞ்சலி உரித்தாகுக….

No comments:

Post a Comment