Thursday 29 March 2018


போராட்டமே ஒரே வழி… 
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு
செல்கோபுரம் துணை நிறுவனம் எதிர்த்து
தொடர் போராட்டம்

27/03/2018 அன்று கூடிய BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு செல்கோபுரங்களைப் பிரிக்க முயற்சிக்கும் அரசின் முடிவிற்கெதிராகத் தொடர்ந்து ஒன்றுபட்டுப் போராடுவது என முடிவெடுத்துள்ளது.

12/04/2018  அன்று டெல்லித்தலைமையகம்...
 மாநிலத்தலைநகர்கள் மற்றும்
 மாவட்டத்தலைநகர்களில் நாடு தழுவிய 
மாபெரும் பெருந்திரள் தர்ணா…

19/04/2018 அன்று மாநிலத்தலைநகர்களில் 
ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி.

மே மாதம் டெல்லியில் 
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் 
சிறப்புக் கருத்தரங்கம்..

இத்தனைக்கும் பிறகு 
அரசு அசையவில்லை என்றால்…
காலவரையற்ற வேலைநிறுத்தம்….

தோழர்களே…
கரையான்களின் புற்றில்…
கருநாகங்களை அனுமதியோம்…
நம் உழைப்பில்  உருவாகிய
மக்கள் சொத்தாம் BSNLஐ…
என்ன விலை கொடுத்தும் காப்போம்…
தயாராவீர் தோழர்களே….

No comments:

Post a Comment