Wednesday 20 May 2020

மே 22 - அனைத்து சங்க அறைகூவல்...

எங்கும் தனியார் மயம்...
எதிலும் தனியார் மயம்...

கொள்ளை நோய்க்காலத்திலே...
கொள்ளை போகும் தேசம்...

வில்லங்க நேரத்திலே...
வெட்கமின்றித் தனியார்களுக்கு
விலை போகும் தேசம்...

போக்கற்றுப் போகுது...
போராடிப்பெற்ற உரிமைகள்...

வக்கற்றுப் போகுது...
வாழ வழியற்றுப் போகுது வயிறுகள்...

8 மணி வேலை... 
12 மணியாகும் கொடுமை...
இனி... உழைப்பவன்...
எலும்புடையும்.... உயிர்வதையும்...


பாதுகாப்புத்துறை கூட
பறிபோகும் அவலம்...
நாடாளுமன்றம் மட்டுமே
நாட்டில் ஒரே அரசுக்கட்டிடம்...

கொரோனாவை விட
கொடிய கொடுமை எதிர்த்து...

22/05/2020 – வெள்ளிக்கிழமை
நாடு தழுவிய எதிர்ப்பு நாள்

மதுரை தொலைத்தொடர்பு வணிகப்பகுதியில்...

மதுரை தல்லாகுளம் தொலைபேசி நிலையம்
மதுரை பொதுமேலாளர் அலுவலகம்...
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம்...
சிவகங்கை தொலைபேசி நிலையம்...
பரமக்குடி தொலைபேசி நிலையம்...
இராமநாதபுரம் தொலைபேசி நிலையம்...
இராமேஸ்வரம் தொலைபேசி நிலையம்... முன்பாக

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக...
மனிதநேயமற்ற மத்திய அரசுக்கு எதிராக...
எ தி ர் ப் பு    மு ழ க் க ம்...

பணியில் உள்ள ஊழியர்கள்...
ஓய்வு பெற்ற ஊழியர்கள்...
ஒப்பந்த ஊழியர்கள்...
அனைவரும் பங்கு கொள்வீர்...

No comments:

Post a Comment