Monday 23 May 2016

விடுப்புச் சம்பளம் 20 சத நிறுத்தம்... நிறுத்தம் 

தற்போது ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு விடுப்புச்சம்பளம் 
LEAVE ENCASHMENT முழுமையாக வழங்கப்பட்டு வருகிறது.  
ஓய்வு பெறும்  தோழர்களுக்கு  20 சத விடுப்புச்சம்பளத்தை நிறுத்தி வைக்குமாறும்... ஓய்வூதிய உத்திரவு வந்த பின்னே  அதனைப் பட்டுவாடா செய்யலாம் எனவும்  மாநில நிர்வாகம்
  19/05/2016 அன்று உத்திரவிட்டிருந்தது. 

PAY ANOMALY காரணமாக ஏப்ரல் 2016ல் ஓய்வு பெற்ற 8 தோழர்களின் ஓய்வூதியம் இன்னும் தீர்க்கப்படவில்லை. எனவே ஓய்வு பெறும்  தோழர்களுக்கு அவர்களது சம்பளம் கூடுதலாகவோ... தவறுதலாகவோ கணக்கிடப்பட்டிருந்தாலோ...  அல்லது  பிடித்தங்கள் செய்ய வேண்டியிருந்தாலோ நிறுத்தி வைக்கப்பட்ட 20 சத விடுப்புச்சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாம்  என்பது நிர்வாகத்தின் கணக்கு.

இது நாள் வரையுள்ள நடைமுறையை மாற்றுவது சரியல்ல என்றும் ஓய்வு பெறும் தோழர்களுக்கு முழுமையான 
விடுப்புச்சம்பளம்   பட்டுவாடா செய்யப்பட வேண்டும் 
எனவும்  நமது மாநிலச்சங்கம் 
PGM FINANCE அவர்களுடன் விவாதித்தது. 
நிர்வாகம் நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. 

ஓய்வு பெறும் தோழர்களுக்கு உதவிட்ட...
மாநில நிர்வாகத்திற்கும்... 
மாநிலச்சங்கத்திற்கும்.. நமது நன்றிகள்..

No comments:

Post a Comment