Tuesday 24 October 2017

அமைதி வழியில் மதுரை…
24/10/2017 அன்று மதுரைப் பொதுமேலாளர் அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் திட்டமிடப்பட்டிருந்தது. 

உண்ணாவிரதம் துவங்கும் முன்பே மதுரை துணைப்பொதுமேலாளர் திரு.சந்திரசேகரன் அவர்கள் தோழர்களை சந்தித்து 25/10/2017 அன்று BSNLEU – NFTE இணைந்த பேச்சுவார்த்தையை மாவட்ட நிர்வாகம் நடத்தவிருப்பதாகவும், பிரச்சினைகள் சுமுகமாக தீர்க்கப்படும் எனவும் உறுதியளித்தார். மேலும் எழுத்துப்பூர்வமாகவும் வேண்டுகோள் விடுத்தார். எனவே மதுரைப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மதுரை மாவட்ட நிர்வாகத்தின் 
ஆக்கப்பூர்வமான அணுகுமுறைக்கு நமது நன்றி.
 பல்வேறு மாவட்டங்களிலும் வந்திருந்து போராட்டத்திற்கு ஆதரவு நல்கிய முன்னணித்தோழர்களுக்கும் நமது நன்றி. இன்றைய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான முறையில் நடைபெற்று அமைதிவழியில் பிரச்சினைகளைத் தீர்த்திடும் என நம்புவோம்.

No comments:

Post a Comment