Monday 6 November 2017

எல்லைகள் விரியும் NFTCL

ஒப்பந்தத் தொழிலாளரின் 
உரிமை காக்கும் இயக்கமாம் NFTCL... 

திக்குகள் தெரியாது… 
திசைவழி தெரியாது...
திகைத்து நின்ற...
திக்கற்று நின்ற...
தொழிலாளியின் துயர் துடைக்க...
எட்டுத்திக்கிலும் நாளும் பொழுதும்... 
தன் காலூன்றி வருகின்றது…

இதோ சுந்தரத்தெலுங்கினிலே… 
ஆந்திர மாநிலத்திலே...
நெல்லூர் மாவட்டத்திலே... 
05/11/2017 அன்று மிகச்சீரும் சிறப்புமாக
தனது மாநில அமைப்பை NFTCL துவக்கியுள்ளது.

NFTE சம்மேளனச்செயலர் 
தோழர்.அஞ்சையா அவர்களின் தலைமையில்…
NFTCL அகில இந்தியத் தலைவர் 
தோழர்.ஆசிக் அகமது… அவர்கள்..
NFTCL அகில இந்தியப் பொதுச்செயலர் 
தோழர்.C.K. மதிவாணன் அவர்கள்..
NFTCL அகில இந்திய சங்க நிர்வாகிகள்..
தோழர்கள்.சுப்பராயன்,அசோக்ராஜன்..
NFTCL தமிழக மாநிலச்செயலர் 
தோழர்.ஆனந்தன் ஆகியோர்  பங்கு பெற…

ஆந்திர மாநிலம் முழுவதுமிருந்து...
ஒப்பந்தத்தொழிலாளர்கள்
அலையெனத் திரண்டு வந்து
ஆந்திர மாநில அமைப்பை
அற்புதமாக துவக்கியுள்ளனர்.

கொடியேற்றம்… 
உணர்ச்சிமிகு கோஷங்கள்….
கண்கவர் கலை நிகழ்ச்சிகள்….
தலைவர்களின் கருத்தாழமிக்க உரைகள்…
ஒப்பந்த ஊழியர்களின் 
உரிமைக்கான கேள்விகள் என
நெல்லூர் NFTCL மாநில அமைப்பு மாநாடு …
நெஞ்சம் நிறைந்த மாநாடாக 
முத்திரை பதித்துள்ளது.

மாநிலத்தலைவராக தோழர்.பீரா அவர்களும்…
மாநிலச்செயலராகத் தோழர்.ஜீலானி கான் அவர்களும்
ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அடிமட்ட ஊழியரின் அல்லல் போக்கிட…
அயராது பாடுபடும்… அனுதினமும் செயல்படும்…
அருமைத்தோழர். C.K.மதிவாணன் அவர்களின்..
அரும்பணி சிறந்திட அன்போடு  வாழ்த்துகின்றோம்..

No comments:

Post a Comment