Tuesday 13 November 2018


ஓரணியாய் கூடுவோம் பேரணியில்… 
தோழர்களே…
நவம்பர் 14
நமது தேசத்தின் ஆலயங்களாம்..
பொதுத்துறைகளை உருவாக்கி…
கலப்பு பொருளாதாரம் கண்ட
இந்திய தேசத்தின் சிற்பி
ஜவஹர்லால் நேரு பிறந்த நன்னாளில்…

நமது உரிமைகளுக்காக…
BSNL வளர்ச்சிக்காக…
பொதுத்துறை காப்பதற்காக…
நாம் நடத்தும்…
நவம்பர் 14 பேரணியில்..
ஓரணியாய்.. பேரணியாய்
அணி திரள்வோம் தோழர்களே…

கஜாப் புயல் கரைகடக்கும்…
பாம்பன் தீவு தொடங்கி…
பன்றிக்காய்ச்சல் பரவிக்கிடக்கும்…
காரைக்குடி வரை…
பணிசெய்யும் நிரந்தர ஊழியர்கள்…
பணிநிறைவு பெற்ற தோழர்கள்…
பணிசெய்தே பாடுபடும் ஒப்பந்த ஊழியர்கள்…
அணி அணியாய்.. ஓரணியாய்…
காரைக்குடி நோக்கி திரண்டு வாரீர்….

No comments:

Post a Comment