Tuesday 10 September 2019

தேர்தல் களம் 

16/09/2019 அன்று BSNLலில் 8வது 
உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் நடபெறவுள்ளது.

அகில இந்திய அளவில் மொத்த வாக்காளர்கள் = 1,10,977
வாக்காளர்கள் அதிகம் உள்ள மாநிலம் - மகாராஷ்டிரா = 10,973
தமிழகத்தில் வாக்காளர்கள் = 7,682
குறைந்த வாக்காளர்கள் - QA ஜபல்பூர் = 35
மொத்த வாக்குச்சாவடிகள் = 1712
அதிக வாக்குச்சாவடிகள் - கர்நாடகா = 176

வாக்குப்பதிவு நேரம்  16/09/2019
காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை 

அமைதிக்காலம் - SILENCE PERIOD 
14/09/2019 - காலை 09.00 மணி முதல் 
(வாக்குப்பதிவு நேரத்திற்கு 48 மணி நேரம் முன்னதாக...)

ஒவ்வொரு சங்கத்திற்கும் ஒரு முகவர்...  ஒரு மாற்று முகவர்... 
மற்றும் ஒரு வாக்கு எண்ணிக்கை முகவர்... 

வாக்குச்சாவடிக்குள் அலைபேசி கொண்டு செல்லத்தடை...

வாக்காளர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்...
அடையாள அட்டை இல்லாதவர்கள் 
அதற்கான நிரப்பப்பட்ட படிவத்தை கொண்டு செல்லவேண்டும்..

வாக்குசீட்டுக்களில் தேர்தல் அதிகாரி கையெழுத்து இருக்க  வேண்டும்...

வாக்குச்சீட்டு கிழிந்திருந்தால் புதிய சீட்டு கேட்டுப்பெறவேண்டும்...

மலைப்பகுதி போன்ற   கடினமான இடங்களில் இருந்து வருபவர்களுக்கு நிர்வாகம் வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும்...

வாக்காளர்களுக்கு அரைநாள் விடுப்பு அளிக்கப்படும்...

தற்காலிகப் பணிநீக்கத்தில் உள்ளவர்களும் வாக்களிக்கலாம்...

தற்காலிக மாற்றலில்அடுத்த மாவட்டங்களுக்கு சென்றவர்களுக்கு 
தபால் ஓட்டு 15 தினங்களுக்கு முன்பாக அனுப்பப்படவேண்டும். 
தபால் ஓட்டில் சின்னம் அல்லது சங்கத்தின் பெயரில் X குறியிட்டு 
தபாலில் திருப்பி அனுப்ப வேண்டும்.

JTO பயிற்சி முடித்து 10/09/2019 அன்று 
பதவி உயர்வு பெற்றவர்கள் வாக்களிக்க இயலாது.

வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்ட பின்பு  கருணை அடிப்படையில் புதிதாக பணி அமர்த்தப்பட்டவர்கள் வாக்களிக்க இயலாது...

வாக்களிக்க செல்பவர்களுக்கு பயணப்படி கிடையாது...

வாக்கு எண்ணிக்கை 
18/09/2019 - காலை 09.00 மணி தொடங்கி 
மாலை 03.00 மணிக்குள் முடிக்கப்படவேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும்  பார்வையாளர்களும்... ஒருங்கிணைப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்...

மதுரை மாவட்டத்திற்கு 
திரு.யுவராஜ் DE /காரைக்குடி அவர்கள் OBSERVER  பார்வையாளராகவும்...
திரு.பிலாவடியான் SDE/மதுரை  ஒருங்கிணைப்பாளராகவும்...

காரைக்குடி மாவட்டத்திற்கு 
திரு.அப்துல் காதர் AGM/மதுரை  அவர்கள் பார்வையாளராகவும்...
திரு.சண்முகம் SDE/காரைக்குடி  ஒருங்கிணைப்பாளராகவும்...
நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தலை அமைதியாக எதிர்கொள்வோம்...

No comments:

Post a Comment