Monday 30 September 2019

மாமணியைத் தோற்போமோ?
தண்ணீர் விட்டா வளர்த்தோம்...
இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்..
கருகத் திருவுளமோ?

எண்ணமெல்லாம் நெய்யாக...
எம்முயிரினுள் வளர்ந்த 
வண்ண விளக்கிது...
மடியத் திருவுளமோ?

தர்மமே வெல்லும் என்னும் 
சான்றோர் சொல் பொய்யாமோ?
கர்ம வினைகள் யாம் கண்டதெல்லாம் போதாதோ?

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
-பாரதி-

No comments:

Post a Comment