Monday 30 September 2019

I D A  உயர்வு 

01/10/2019 முதல் IDA 5.3 சதம் உயர்ந்துள்ளது. 
இத்துடன் மொத்தப் புள்ளிகள் 152 சதமாகும்.

2007ல் பஞ்சப்படி 68.8 ஆக இருக்கும்போதே 
நம்மால் பஞ்சப்படி இணைப்பைப் பெற முடிந்தது. 
இரண்டாவது ஊதிய மாற்றம் பெற முடிந்தது. 
ஆனால் இப்போது   IDA 152 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளன.
ஆனாலும் பஞ்சப்படி இணைப்பு என்பது 
நம்மைப் பொறுத்தமட்டில் கானல் நீரே. 

 IDA உயர்வு பற்றி ஊழியர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.
கூடுதலாக IDA உயர்ந்தால் கூடுதலாக மகிழ்ச்சி அடைவார்கள்.
ஆனால் தற்போது ஊதியமே கைக்கெட்டாத நிலையில்...
பஞ்சப்படி உயர்வு ஊழியர்களுக்கு உற்சாகம் தரவில்லை.

BSNLலில் படிப்படியாக பஞ்சம் தலைவிரித்தாடும் வேளையில்...
பஞ்சப்படிகள் உயர்ந்து என்னாகப் போகிறது?

No comments:

Post a Comment