Wednesday 19 February 2020


கையெழுத்து இயக்கம்... 
BSNL நிறுவனத்தில் நிரந்தர ஊழியர்களுக்கு
ஒருமாத சம்பளம் வழங்கவில்லை...
ஒப்பந்த ஊழியர்களுக்கோ
ஓராண்டு சம்பளமில்லை...
இந்தக் கொடுமை எதிர்த்து
நமது இயக்கங்கள் சென்னை நீதிமன்றத்தில்
வழக்குத் தொடுத்த அடிப்படையில்..
தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி முழுமையாக
ஒப்பந்த ஊழியர் பிரச்சினையைத் தீர்க்காது...
எனவே ஒப்பந்த ஊழியர் பிரச்சினையை
மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்ல
தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்திட
NFTE மற்றும் ஒப்பந்த ஊழியர் 
மாநிலச்சங்கங்கள் அறைகூவல் விட்டுள்ளன.
---------------------------------
BSNL ஒப்பந்த ஊழியர் துயரம் துடைத்திட...
கவன ஈர்ப்பு கையெழுத்து இயக்கம்....
22/02/2020 – உலக சாமானியர்கள் தினத்தில்...
சாமானியத் தோழர்களுக்காக நடைபெறும்.
---------------------------------
கையெழுத்து இயக்கத் துவக்க நிகழ்வு
 ---------------------------------
22/02/2020 – சனிக்கிழமை – மாலை 04.00 மணி
தல்லாகுளம் தொலைபேசி நிலையம் – மதுரை
  ---------------------------------
தலைமை : தோழர். வெ.மாரி
NFTE மாவட்டச்செயலர் – காரைக்குடி
 ---------------------------------

பங்கேற்பு : தோழர்கள்
G. இராஜேந்திரன்
NFTE மாவட்டச்செயலர் – மதுரை

T. பரிமளம்
NFTE மாநில உதவித்தலைவர்

G. சுபேதார் அலிகான்
NFTE மாநில அமைப்புச்செயலர்

B. முருகன்
ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச்செயலர்

B. லால்பகதூர்
NFTE மாவட்டத்தலைவர் – காரைக்குடி

 சிறப்புரை 
தோழர். பழ. இராமச்சந்திரன்
AITUC – துணைப்பொதுச்செயலர்(உள்ளாட்சி)

நன்றியுரை
தோழர். பரமசிவம் - NFTE கிளைச்செயலர்
 ---------------------------------
ஒப்பந்த ஊழியர்கள்... ஓய்வு பெற்ற தோழர்கள்
பணியில் உள்ள தோழர்கள் திரளாகக் கலந்து கொள்ளுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

No comments:

Post a Comment