Friday 10 June 2016

பொதுத்துறை அதிகாரிகளுக்கான 
3வது ஊதிய மாற்றக்குழு 
3rd PAY REVISION COMMITTEE FOR CPSE


பொதுத்துறை அதிகாரிகளுக்கான 
3வது ஊதியக்குழு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஓய்வு பெற்ற நீதிபதி சதீஷ் சந்திரா தலைமையில் 
3 உறுப்பினர்களைக் கொண்ட  குழு அமைக்கப்பட்டுள்ளது. 

ஊதியக்குழு 
தலைவர் : 
நீதிபதி சதீஷ் சந்திரா - RETD JUDGE 

உறுப்பினர்கள் : 
திரு.ஜுகல் மகோபாத்ரா - RETD IAS 
பேராசிரியர்.மனோஜ் பண்டா -DIRECTOR/IEG 
திரு.சைலேந்திர பால்சிங் -  RETD DIRECTOR(HR) /NTPC


  • ஆறு மாத காலத்திற்குள் குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். 
  • மத்திய அரசின் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை குழு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 
  • தற்போதுள்ள A, B, C மற்றும் D பிரிவு பொதுத்துறைகளுக்கேற்ப ஊதிய மாற்றம் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
  • ஊதிய மாற்றம் 01/01/2017 முதல் அமுல்படுத்தப்படும்.


தோழர்களே...

கடந்த 01/06/2016 அன்று  
NATIONAL CONFEDERATION OF OFFICERS ASSOCIATION 
 என்னும் NCOA 3வது ஊதியக்குழுவை அமைக்கக்கோரி 
டெல்லி DPE அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.  

மேலும் 22/06/2016 அன்று தர்ணாவும்...
27/07/2016 அன்று தலைநகரில் பேரணி 
நடத்திடவும் அறைகூவல் விடுத்திருந்தது. 

பொதுத்துறை அதிகாரிகளின் தேசியக்கூட்டுக்குழுவின்  தொடர்ந்த வலியுறுத்தலால் காலத்தே ஊதியக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

நமது துறையிலும்  ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்திற்கான 
பணிகள் விரைவில் துவங்கும்  என நம்புவோம்.                                 

No comments:

Post a Comment