Tuesday 14 June 2016

தோழர்.கார்த்தி குடும்ப நிவாரண நிதி...
காரைக்குடித் தோழர்களின் கவனத்திற்கு...


சென்னை ஜெகன் இல்லத்தில் பணிபுரிந்த அன்புத்தோழன் 
கார்த்தியின் அகால மரணம் நமது தோழர்கள் அறிந்ததே... 
தோழர்.கார்த்தியை நம்பி இருந்த அவரது குடும்பத்தினர் 
மிகவும் பொருளாதார சிரமத்தில் உள்ளனர். 
அந்தக்குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்ட வேண்டியது நமது கடமை. 
நமது மாநிலச்சங்கம் அளித்துள்ள தகவலின்படி ஏறத்தாழ 40 ஆயிரம் ரூபாய் தற்போது நிவாரண நிதியாக வந்துள்ளது. குறைந்தபட்சம் 
ஒரு லட்சம் நிவாரண நிதி என்பது நமது இலக்கு. 

இன்னும்... திருச்சி, தஞ்சை,கடலூர், ஈரோடு, மதுரை,விருதுநகர்,பாண்டி,நெல்லை மற்றும் நாகர்கோவில்  மாவட்டங்கள் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டியுள்ளது.  

தோழர். கார்த்தி காரைக்குடி மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியராய்ப் பணிபுரிந்து.. நம்மால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் என்பதால் நமக்கு மற்ற மாவட்டங்களை விடக்கூடுதல் பொறுப்புள்ளது. 

எனவே தோழர் கார்த்தியை நன்கு அறிந்த, அவரோடு நட்புக்கொண்ட, அவரோடு பணி புரிந்த காரைக்குடி  மாவட்டத்தோழர்கள் தங்கள் பங்கை உடனடியாக.. கூடுதலாக.. அளிக்க வேண்டும். 

நமது ஒவ்வொரு துளி உதவியும்...
கார்த்தி குடும்பத்தின் கண்ணீர்த்துளி துடைக்க உதவும்...
மறவாதீர்... தோழர்களே...
இது.. நமது அன்பு வேண்டுகோள்...

No comments:

Post a Comment