Sunday 9 July 2017

மதுரை மாவட்ட மாநாடு

08/07/2017 அன்று மதுரையில்... 
மாவட்டத்தலைவர் தோழர்.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில்...
NFTE மாவட்ட மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது. 
சம்மேளனச்செயலர்  தோழர்.ஜெயராமன் அவர்கள் 
மறைந்த மாபெரும் தலைவர் ஞானையா அவர்களுக்கு 
அஞ்சலியுரையாற்றி… பின் துவக்கரையாற்றினார். 

மதுரை  மாவட்டப்பொதுமேலாளர் 
திருமதி.இராஜம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
சகோதர தொழிற்சங்கத்தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். 
நெல்லை,திருச்சி,காரைக்குடி NFTE மாவட்டச்செயலர்கள் பங்கேற்றனர். 
ஓய்வூதியர் சங்கத்தலைவர் தோழர்.தர்மராஜன் முழுமையாக கலந்து கொண்டு சிறப்பித்தார். மாவட்டம் முழுமையும் இருந்து திரளாக தோழர்களும் தோழியர்களும் கலந்து கொண்டனர். 

மாநிலச்சங்கத்தின் சார்பில்...
மாநில துணைத்தலைவர் தோழியர்.பரிமளம் அவர்களும், 
மாநில அமைப்புச்செயலர் தோழர்.சுபேதார் அலிகான் 
அவர்களும் சிறப்புரையாற்றினர்.
மாநிலச்செயலர் தோழர்.நடராஜன் அவர்கள்
நிறைவுரையாற்றி மாநாட்டைச்சிறப்பித்தார். 
புதிய நிர்வாகிகள் பட்டியல் மாநிலச்செயலரால் அறிமுகப்படுத்தப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மாவட்டத்தலைவர் : தோழர். S.சிவகுருநாதன்
மாவட்டச்செயலர்  : தோழர். G.இராஜேந்திரன்
மாவட்டப்பொருளர் : தோழர். D.செந்தில்குமார்

தமிழ்ச்சங்கம் வளர்த்த மதுரையில்…
NFTE சங்கம் வளர்த்திட நமது வாழ்த்துக்கள்….

No comments:

Post a Comment