Tuesday 8 August 2017

தொழிலாளர் கருத்தரங்கம்

தொழிலாளர்களின் 12 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 08/08/2017 அன்று மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலின்படி அனைத்து தொழிற்சங்க கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. NFTE சார்பாக பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர் சிங் அவர்களின் தலைமையில் ஏறத்தாழ 30 தோழர்கள் கலந்து கொண்டனர்.  தமிழகத்திலிருந்து மாநிலச்செயலர் தோழர்.நடராஜன், மாநிலத்தலைவர் தோழர்.காமராஜ், STR மாநிலச்செயலர் தோழர்.அன்பழகன், ஆகியோர் கலந்து கொண்டனர். 
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

12 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி...
  • நாடு முழுக்க அனைத்து மட்டங்களிலும் கோரிக்கைகள் விளக்கவுரை மற்றும் பரப்புரை.
  •  நவம்பர் 9,10 மற்றும் 11 தேதிகளில்   டெல்லியில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்கும் மூன்று நாட்கள் தொடர் தர்ணா.
  • இறுதியாக காலவரையற்ற நாடு தழுவிய வேலை நிறுத்தம்.

 தோழர்களே… தயாராவீர்…

No comments:

Post a Comment