Wednesday 23 August 2017

ஒப்பந்த ஊழியர் சம்பளப்பட்டுவாடா

நிதி ஒதுக்கீடு செய்யப்படாத  காரணத்தால் இந்த மாதம் 
ஒப்பந்த ஊழியர்களுக்கான ஜூலை மாத சம்பளம் தமிழகம் முழுவதும் பட்டுவாடா செய்யப்படவில்லை. ஒரிரு இடங்களில் மட்டுமே பட்டுவாடா நடந்துள்ளதாகத் தெரிகின்றது. 
சில ஒப்பந்தக்காரர்கள்  ஜூன் மாத சம்பளத்தைக் கூட இன்னும் பட்டுவாடா செய்யவில்லை. மல்லி செக்யூரிட்டி என்னும் ஒப்பந்தகாரர் ஜூன் மாதம் வெறும் 3000 ரூபாய் மட்டுமே பட்டுவாடா செய்தார். 

BSNL நிறுவனத்தில் தங்களது பில்கள் முறையாகப் பட்டுவாடா செய்யப்படுவதில்லை என்பது அவர்களின் வருத்தமாகும். 
சில ஒப்பந்தகாரர்களுக்கு கோடிக்கணக்கில் பில்கள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள். எனவே இந்த மாதம் எல்லா ஒப்பந்தகாரர்களும் ஒன்று சேர்ந்து BSNL பில்களை பட்டுவாடா செய்யாதவரை ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளப்பட்டுவாடா செய்வதில்லை என்ற நிலையை எடுத்துள்ளதாக தெரிகின்றது. 

இந்நிலையில் டெல்லியில் இருந்து நிதி ஒதுக்கீடு வந்துள்ளதாகவும்... இன்று 24/08/2017 நிலுவையில் உள்ள பில்கள் பட்டுவாடா செய்யப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நாளை 25/08/2017 விடுமுறை தினம்… நாளை மறுநாள் நான்காம் சனிக்கிழமை வங்கி விடுமுறை. எனவே இன்று ஒப்பந்தகாரர்களுக்கு பில்கள் பட்டுவாடா செய்யப்பட்டாலும் கூட திங்கள்கிழமை அன்றுதான் ஒப்பந்த ஊழியர்களின் சம்பளம் பட்டுவாடா செய்யப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. ONLINE என்னும் நேரடிப் பட்டுவாடா நடைமுறையில் உள்ள இக்காலத்தில் ஒப்பந்தகாரர்கள் முயன்றால் 
இன்றே சம்பளம் பட்டுவாடா செய்யலாம்.

தோழர்களே…

ஒப்பந்த ஊழியர்களான அடிமட்ட ஊழியர்கள் தொடர்ந்து மாதாமாதம் இவ்வாறு அலைக்கழிக்கப்படுவது மிகவும் கொடுமையாகும். 
மாதம் முழுக்க வேலை செய்து விட்டு அடுத்த மாதம் முழுக்க சம்பளம் எப்போது வரும்? என்று ஏங்கி நிற்கும் நிலை முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும். உழைத்தவன் வியர்வை காயுமுன்னே கூலி கொடுக்கப்பட வேண்டும் என்பது அண்ணல் நபிகள் வாக்கு. உழைத்தவன் வியர்வையும் காய்ந்து விட்டது…. கூலியைக் கேட்டு அவனது தொண்டையும் காய்ந்து விட்டது. கூலி கிடைக்காமல் வயிறும் காய்ந்து விட்டது. இந்தக்கொடுமைகளைக் கண்டு 
நம் மனமும் காய்த்து விட்டது. அடிமட்டத் தொழிலாளிக்கு இழைக்கப்படும் இந்த அநீதி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.  

No comments:

Post a Comment