Wednesday 8 April 2020

உத்தமத்தலைவன் உதய தின விழா 

ஏப்ரல் - 8 -
தோழர். ஓ .பி.குப்தா பிறந்த நாள் 

காரைக்குடி NFTE சங்க அலுவலகத்தில் தானைத்தலைவர் 
ஓ .பி.குப்தா அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்புடன் நடைபெற்றது.
மூத்த தோழர் முத்துகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் தோழர்கள் மலரஞ்சலி செலுத்தி சிறப்பு செய்தனர்.

தோழர் முத்துகிருஷ்ணன் தனது தலைமையுரையில்
ஒரு காந்தி... ஒரு ஏசு...ஒரு புத்தர்... ஒரே ஒரு  ஓ .பி.குப்தா என 
அவரது பெருமை சொல்லி அவரது எளிமை மற்றும் தியாகத்தை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்தார்.

அருமைத்தோழர். காதர் பாட்சா அவர்கள் 
தோழர் குப்தாவின் பிறந்த நாளையொட்டி ...
காரைக்குடி அம்மா உணவகத்தில் 200 பேருக்கு இலவச உணவளித்தார். 
VRSல் சென்ற பின்பு தோழர் குப்தாவால் தான் பெற்ற ஓய்வூதியப் பணத்தில் அவரது பிறந்த நாளில் ஏழை எளியோருக்கு 
இலவச உணவு அளிப்பதை பெருமையாகக் குறிப்பிட்டார்.

மாவட்டத்தலைவர் தோழர் லால் பகதூர் 
மத்திய அரசில் பணிபுரிந்து ஓய்வு பெறப்போகும் தனது மூத்த சகோதரனை விட தனது ஓய்வூதியம் கூடுதலாக கிடைப்பதற்கு 
தோழர் குப்தாவே காரணம் என்று புகழ்மாலை சூட்டினார்.

கிளைச்செயலர் தோழர்.ஆரோக்கியம் அவர்கள் அடிமட்ட ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஒளிவிளக்கு தோழர்.குப்தா என புகழுரைத்தார்.

மாவட்ட உதவிப்பொருளாளர் தோழர்.ஜெயராமன்
குப்தாவை தமக்கு வாழ்வளித்த பெரிய தந்தை...
தோழர்களின் பிரிய தந்தை என மெய் சிலிர்க்க கூறினார்.

இறுதியில் மாவட்டச்செயலர் தோழர்.மாரி 
நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.

உலகளந்த தலைவனின்...
உன்னதத் திருநாளில் 
ஊரடங்கு வேளையிலும்..
உணர்வோடு..கலந்து கொண்ட

உழைக்கும் தோழர்கள் 
ஓய்வு பெற்ற தோழர்கள் 
ஒப்பந்த ஊழியர்கள்...
அனைவருக்கும் நன்றிகள் பல...

வாழ்க தோழர். குப்தா புகழ்...
வழி நடத்தட்டும் நம்மை...
தோழர்.குப்தா நிழல்...

No comments:

Post a Comment