Thursday 30 April 2020

மனமார்ந்த வாழ்த்துக்கள் 

கொரோனாக் காலம் மிகவும் கொடியது...
நமது தோழர்களின் நல்லது... கெட்டது என 
எந்த நிகழ்விலும் யாரும் பங்கு கொள்ள இயலாத நிலை...

குறிப்பாக...
முப்பது ஆண்டுகள்... நாற்பது ஆண்டுகள்...
இந்த இலாக்காவிலே பணிபுரிந்து...
ஓய்வு பெறும் அன்று...
அலுவலகத்தில் வாழ்த்துவார் யாருமில்லை...
கரிசனத்தோடு கை குலுக்குவார் எவருமில்லை...
வீடு வரை சென்று விடை கொடுக்க
தோழர்களால் இயலவில்லை...

ஆனாலும் காரைக்குடியில்...
அடாத ஊரடங்கிலும்...
விடை கொடுக்கும் நிகழ்ச்சியை 
விடாது நடத்துகின்றோம்...

இன்று இராமநாதபுரத்தில் பணி நிறைவு பெற்ற 
தோழர்.வெலிங்டன்  - ஓட்டுநர் அவர்களின் 
பணி நிறைவு விழா எளிமையாக இனிமையாக நடைபெற்றது.
கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள் 
சரவணன் JTO... தவசி JTO...
பரமக்குடி கிளைச்செயலர் தோழர் தமிழரசன் 
மற்றும் தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்...

VRSல்  உயர் அதிகாரிகள் விடை பெற்ற பின்பு...
நமது JTO தோழர்களே... 
அங்குமிங்கும் சுழன்று உயர்  பணி புரிகின்றார்கள்...
மூத்தவர்களை வழியனுப்பும் நிகழ்வை...
பொறுப்புடன்  நடத்திய 
இளையவர்களுக்கு நமது அன்பான வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment