Thursday 23 April 2020


விலைவாசிப்படி DA முடக்கம்  

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு
வழங்கப்பட வேண்டிய விலைவாசிப்படி DAவை முடக்கி 
மத்திய அரசு இன்று 23/04/2020 உத்திரவு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 
ஜனவரி 2020 முதல் 4 சத DA உயர்ந்துள்ளது
மொத்த DA 21 சதமாகும்.
தற்போதுள்ள சூழலில்....
கொரோனா வியாதியைச் சமாளிக்க
அரசுக்கு அதிக நிதி தேவைப்படுவதால்...
மத்திய அரசு தனது...
ஊழியர்களுக்கும்... ஓய்வூதியர்களுக்கும்...
ஜனவரி 2020 முதல் வழங்கப்பட வேண்டிய DA
ஜூலை 2020 முதல் வழங்கப்பட வேண்டிய DA
ஜனவரி 2021 முதல் வழங்கப்பட வேண்டிய DA
என 18 மாதங்களுக்கு  
விலைவாசிப்படியை முடக்கியுள்ளது.

ஜூலை 2021ல் மறுபரிசீலனை செய்யப்பட்டு
18 மாதங்களில் உயர்ந்த விலைவாசிப்புள்ளிகளையும்
கணக்கில் கொண்டு 01/07/2021 முதல் DA வழங்கப்படும்.
ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை 
18 மாதங்களுக்கு நிலுவை ஏதும் கிட்டாது.

01/04/2020 முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கு
VDA என்னும் விலைவாசிப்படி அறிவிக்கப்பட வேண்டும். 
இன்றைய தேதி வரை VDA அறிவிக்கப்படவில்லை.
எனவே அதுவும் முடக்கப்படும் என்றே தோன்றுகிறது.

BSNL ஓய்வூதியர்கள் IDA பிரிவில் ஓய்வூதியம் பெற்றாலும் 
அவர்களுக்கும் இது அமுல்படுத்தப்படும் என்றே தெரிகிறது.

BSNL நிறுவனம் தனது வருமானத்தில் இருந்து
தனது நிறுவனத்தில் பணிபுரியும்
ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குகிறது.
ஏப்ரல் 2020 முதல் கிடைக்க வேண்டிய 
IDA உத்திரவும் வெளியிடப்பட்டு விட்டது.
IDAவை BSNL  ஏப்ரல் 2020லிருந்து அனுமதிக்கின்றதா?
இல்லையா என்பது விரைவில் தெரிய வரும்.
இது BSNL  நிர்வாக முடிவைப் பொறுத்தது.

மத்திய அரசின் இந்த முடிவு...
கொரோனாவை விடக்கொடுமையானது.
என்பது மட்டும் நமக்குப் புரிகிறது...

No comments:

Post a Comment