Tuesday 3 June 2014

செய்திகள் 

DOT காலத்தில் பதவி உயர்வு பெற்று BSNL உருவான  01/10/2000க்குப்பின் தங்களது ஆண்டு உயர்வுத்தொகை தேதிக்கு பதவி உயர்வு பெற விருப்பம் தெரிவித்தவர்களின் கோரிக்கை மறுக்கப்பட்டு வந்தது. 
கடந்த அகில இந்திய JCMல் இது விவாதிக்கப்பட்டு  நிர்வாகத்தால் ஒத்துக்கொள்ளப்பட்டது. இதனால் உண்டாகும் நிலுவைப்பிடித்தத்தையும் நிறுத்தி வைக்க நிர்வாகம் இசைந்தது. ஆனால் JCM MINUTES கூட்டக்குறிப்பில் இது பற்றிக்குறிப்பிடப்படவில்லை. 
எனவே இது பற்றித்தலையிட மத்திய சங்கத்தை
 தமிழ் மாநில சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது

JTO/TTA  தோழர்கள் தொடுத்த வழக்கில் சென்னை CAT  வழங்கிய தீர்ப்பை எதிர்த்து BSNL நிர்வாகம் மேல் முறையீடு செய்ய வேண்டும் 
என BSNLEU சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

2014 முதல் காலாண்டில் இந்தியா 28 மில்லியனுக்கும் அதிகமான செல்போன் இணைப்புக்களைக் கொடுத்து சாதனை புரிந்துள்ளது. உலகில் வேறெங்கும் 3 மாதங்களில் இவ்வளவு இணைப்புக்கள் கொடுக்கப்பட்டதில்லை. இதே காலத்தில் சீனாவில் 19 மில்லியன் இணைப்புக்களே கொடுக்கப்பட்டுள்ளன.

 BSNL வாடிக்கையாளர்கள் INTERNET  வலைப்பின்னல் வசதி இல்லாமலே தங்களது செல்போனில் முகநூல் என்னும் facebookஐ பயன்படுத்தும் வசதி தேசத்தின் கிழக்கு மற்றும் தெற்குப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும். இதற்காக BSNL U2opia நிறுவனத்துடன் 
ஒப்பந்தம் செய்துள்ளது. 

ஏப்ரல்  2014ல் பணி நிறைவு பெற வேண்டிய தற்போதைய BSNL CMD திரு.உபாத்யாய் அவர்களின் பதவிக்காலம் 
ஜூன் 2014 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment