Sunday 31 July 2016

தேர்வுகளும்... தேவையற்ற குழப்பங்களும்...

22/05/2016 அன்று   2013-14ம்  ஆண்டிற்கான  
JTO காலியிடங்களுக்கு இலாக்காத்தேர்வு நடத்தப்பட்டது. 
08/07/2016 அன்று முடிவுகள் முழுமையான  முறையில் இல்லாமல் அரைகுறையாக வெளியிடப்பட்டது. 
2008ம் ஆண்டு TTA  நியமனம் பெற்ற தோழர்களின் 
முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. 
இதன் பின் மொத்த முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. 

இந்த முடிவுகளை முறையாக அறிவிக்கும் முன்னரே 
2014-15ம் ஆண்டிற்கான JTO காலியிடங்களுக்கு  28/08/2016 அன்று தேர்வெழுத  விண்ணப்பங்கள் இணையத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டன. 31/07/2016 அன்று பதிவு செய்யக் கடைசி நாள். 

ஏற்கனவே நடந்து முடிந்த தேர்வின் முடிவுகளை அறிவிக்காமல் 
அடுத்த தேர்வுக்கு ஆயத்தமாவது முற்றிலும் அபத்தமாகும். 
தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தோழர்கள் வரக்கூடிய தேர்வை எழுதுவதா? வேண்டாமா ? என்ற குழப்பத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

ஏற்கனவே நடந்த தேர்வு முடிவுகளை அறிவிக்காத நிலையில் 
28/08/2016 நடக்கவுள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதியை தள்ளி வைத்திருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை. 
JTO பதவிகளுக்கான தேர்வு மட்டும் நடக்கும். 
வேறு எதுவும் நடக்காது என்பது கேலிக்கூத்தாக உள்ளது.
குழப்பத்தின் உச்சமாக உள்ளது.

இலாக்கா உடனடியாக நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை 
ஒட்டு மொத்தமாக உடனடியாக  அறிவிக்க வேண்டும்.   
நடக்கப் போகும் தேர்வுக்கான 
விண்ணப்ப தேதியை தள்ளி வைக்க வேண்டும்.

இதுவே இளம் தோழர்களின் எதிர்பார்ப்பு... கோரிக்கை...

4 comments:

  1. SNATTA along with management killed post july TTA's future,feeling so happy,grateful to SNATTA and co..feeling so happy..vaalga SNATTA valarga avagaladhu thondugal...

    ReplyDelete
  2. தோழரே வரலாறு தெரியாதவரா நீர் BSNL ஆன பிறகு 13 ½ ஆண்டுகள் கழித்து
    ஒரே ஒரு தேர்வு மட்டுமே இவ்வளவு பெரிய நிறுவனத்தில் பெரிய பெரிய பிதற்றல் விடும் union மற்றும் association கள் உள்ள நிறுவனத்தில் நடத்தப்பட்டது.
    JTO கனவு என்பதே nonexecutive க்கு குறுகிய காலமே 12 ஆண்டுகள்.தாங்கள் மட்டும் 8 ஆண்டுகளில் பேராசை கொள்வதேன்.

    ReplyDelete
  3. Very good reply for your peer sir,similar kind of thoughts only spoiled our future .I wrote the exam so asking my rights..f we not eligible y mgmt permitted us?y SNATTA wrongly propaganded as result will declare for all? Can u have any answer for this? Cheaters ....tats all...

    ReplyDelete
  4. Very good reply for your peer sir,similar kind of thoughts only spoiled our future .I wrote the exam so asking my rights..f we not eligible y mgmt permitted us?y SNATTA wrongly propaganded as result will declare for all? Can u have any answer for this? Cheaters ....tats all...

    ReplyDelete