Tuesday 12 July 2016

கங்கா ஜலம்..

அஞ்சல் துறை இப்போது கங்கை நீர் விற்பனையைத் துவக்கியுள்ளது.
பிரதமர் மோடி அவர்கள் பீகாரில் இந்த விற்பனையைத் துவக்கி வைத்துள்ளார். அவரது திட்டத்தின்படி இந்தியாவில் உள்ள அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் கங்கை நீர் விற்பனை செய்யப்படும். 

தமிழகத்தில் 9 தலைமை  தபால் அலுவலகங்களில் விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து 
94 தலைமை  தபால்நிலையங்களிலும்...
 தண்ணீர் வியாபாரம் தடங்கலின்றி நடைபெறும்
 என அறிவிக்கப்பட்டுள்ளது.

கங்கை நீர் மட்டுமின்றி... துளசி தீர்த்தம்.. 
ருத்ராட்சக்கொட்டைகள்... கமண்டலங்கள்... 
ரெடிமேட் ஜடாமுடிகள்...பாதரட்சைகள்...
போன்ற விற்பனையும் 
இனி அஞ்சல் துறையில் அமோகமாக  நடைபெறலாம்.

பாரம்பரியம் மிக்க...அஞ்சல் துறை...
பத்துப்பைசா செலவில்...
பாரதத்தை இணைத்த .. அஞ்சல் துறை...
கங்கா ஜலம் விற்கும் காட்சி கண்டு..
நம் கண்ணில் ஜலம் கொட்டுகிறது...

No comments:

Post a Comment