Friday 8 June 2018


மாவட்டம் தழுவிய போராட்டம்

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு
மல்லி செக்யூரிட்டி குத்தகைக்காரன்
ஏப்ரல் மாத சம்பளம் வழங்காததைக் கண்டித்தும்…

கேபிள் பணிசெய்யும் தொழிலாளர்களுக்கு
ஏப்ரல் மாத சம்பளத்தில்…
குத்தகைக்காரர் 15 நாளும்…
அதிகாரிகள் 15 நாளும் சம்பளம் வழங்கும்
கோமாளித்தனத்தை எதிர்த்தும்…

தொழிலாளர் கணக்கில் கட்டப்படாமல்….
நிர்வாகத்தின் வசமுள்ள பல லட்சம் ரூபாய்
EPF பணத்தை தொழிலாளர் கணக்கில் சேர்க்கக் கோரியும்…

2016-17 ஆண்டிற்கு ALERT SECURITY குத்தகைக்காரர்…
போனஸ் வழங்கக்கோரியும்….

மே 2018 முதல் குத்தகை எடுத்துள்ள புதிய குத்தகைக்காரர்…
அடையாள அட்டை… ESI அட்டை வழங்கிட வலியுறுத்தியும்…

திறனுக்கேற்ற கூலி வழங்கிட குழு அமைக்க கோரியும்….

ஒவ்வொரு மாதமும் 7ந்தேதி…. கூலி வழங்கிடக்கோரியும்….

NFTE – NFTCL – BSNLEU – TNTCWU
இணைந்த கண்டன ஆர்ப்பாட்டம்
காரைக்குடி மாவட்டத்தில்…
இராமநாதபுரம்… பரமக்குடி… சிவகங்கை… காரைக்குடி
ஆகிய ஊர்களில் எழுச்சியோடு நடைபெற்றது.

தற்போது காரைக்குடி மாவட்டத்தில்…
துணைப்பொதுமேலாளர்கள் யாரும் இல்லாத நிலையில்..
இது ஒரு அடையாள போராட்டமாக மட்டுமே நடத்தப்பட்டது….

தொழிலாளர் உரிமைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால்…
வலுவான ஒன்றுபட்ட போராட்டம் விரைவில் வெடிக்கும்….

No comments:

Post a Comment