Tuesday 5 June 2018


நீட் என்னும் உயிர்க்கொல்லி…

உயிர் காக்கும் மருத்துவப்படிப்பு…
இன்று…
உயிர் போக்கும் மரித்திடும் படிப்பு…

அன்று… அரியலூர் அனிதா…
இன்று… செஞ்சி பிரதீபா…

சென்ற ஆண்டில் நீட் தேர்வில்
பிரதீபா  பெற்றது.. 155 மதிப்பெண்…
தனியார் மருத்துவக் கல்லூரியில்
சேர்ந்திட மதிப்பெண் இருந்தது…

மதிப்பெண் இருந்தென்ன?
மதிப்பான பணம் வேண்டுமே?
எனவே இந்த ஆண்டு…
மீண்டும் பிரயத்தனம் செய்தாள் பிரதீபா…

தொடர் முயற்சி செய்திட்ட போதும்…
இந்தாண்டு
அவள் பெற்றது 39 மதிப்பெண் மட்டுமே…
காரணம்…
அவள் கற்றது தமிழகக் கல்வி….

மக்கள் நலம்  காக்கும்
படிப்பில் ஆசை வைத்தாள்…
மக்கள் நலன் காக்கும் அரசு... இந்த..
மண்ணிலே இல்லாத காரணத்தினால்….
மனம் உடைந்தாள்… வாழ்வு முடித்தாள்…

தமிழகத்தில்….
அனிதாக்கள்… பிரதீபாக்கள்…
முற்றுப்புள்ளியாகட்டும்…

676 மதிப்பெண் பெற்று….
தமிழகத்திற்கு பெருமை சேர்த்த
கீர்த்தனாக்கள் துவக்கப்புள்ளியாகட்டும்…


No comments:

Post a Comment