Friday 22 June 2018


முடிவில்லா போராட்டங்கள் முடிந்திடுமா…
ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி
NFTE – BSNLEU - NFTCL – TNTCWU
இணைந்த போராட்டம்
25/06/2018 – திங்கள் – மதியம் 12.00 மணி
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி.
 =================================================
 முடிவில்லா போராட்டங்கள் முடிந்திடுமா…

அன்றாடக்கூலிகளான ஒப்பந்த ஊழியர்கள்…
அனுதினமும் உழைக்கின்றார்கள்….
அனுதினமும் போராடுகின்றார்கள்….
அரியணையில் அமர்வதற்காகப் போராடுகின்றார்களா?
இல்லை… தோழர்களே…
அணைப்பதற்காகப் போராடுகின்றார்கள்…
அனுதினமும் எரியும் தங்கள் வயிற்றை…
அணைப்பதற்காகப் போராடுகின்றார்கள்…

உழைப்புக்கு கூலி கேட்டு…
வயிற்றுக்கு சோறு கேட்டு….
வாழ்நாள் முழுவதும் போராடுகின்றார்கள்….

இந்தக்கொடுமை முடிந்தபாடில்லை..

காரைக்குடி மாவட்டத்தில்…
கேபிள் பணி செய்யும் தோழர்களுக்கு…
ஏப்ரல் மாத சம்பளம் முழுமையாக வழங்கப்படவில்லை…
15 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது….
மே மாதச்சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை…

HOUSE KEEPING பணி செய்யும் தோழர்களுக்கு…
மே மாதச்சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை…
குத்தகையை புதுப்பிப்பதில்… நீட்டிப்பதில் தாமதம்…

காவல் பணி செய்யும் தோழர்களுக்கு….
மேமாதச்சம்பளம் புதிய குத்தகையில்….
அரைகுறையாக வழங்கப்பட்டுள்ளது….

பலமுறை நிர்வாகத்திடம் இதுபற்றி
எடுத்துக்கூறியும் எந்தப் பலனும் இல்லை…

எனவே…
தொடர்ந்து போராடுகின்றோம்…
இணைந்து போராடுகின்றோம்…
முடிவின்றி போராடுகின்றோம்…
வேறு வழியின்றி போராடுகின்றோம்…

 தோழர்களே…. போராடுவோம்…. வேறு வழி ஏதுமில்லை….

No comments:

Post a Comment