Thursday 17 January 2019


இணைவோம்… உயர்வோம்…
தோழர்களே...
மார்க்ஸ் பிறந்து 200 ஆண்டுகள் ஆகிவிட்டன…
ரஷ்யப்புரட்சி நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டன…
இந்திய தேசம் விடுதலை அடைந்து 71 ஆண்டுகள் ஆகிவிட்டன…
ஒப்பந்த ஊழியர் ஒழிப்புச்சட்டம் உருவாகி 49 ஆண்டுகள் ஆகிவிட்டன…
ஆனாலும்…. சுரண்டல் என்னும் கொடுமை இன்னும் அகலவில்லை..
ஒப்பந்தம் என்ற பெயரில் ஒப்பந்தத் தொழிலாளர்கள்…
நம் கண்முன்னே நாளும் சுரண்டப்படுகின்றார்கள்…

ஒன்றுபட்ட இயக்கங்கள்தான்…
உருக்குப் போன்ற இயக்கங்கங்கள்தான்…
சுயநலமில்லாத பொதுநல இயக்கங்கள்தான்…
அடிமட்ட ஊழியரின் அடிமைச்சங்கிலியை அறுத்தெறிய முடியும்…

ஆனால்…
தமிழகத்தில்… ஒப்பந்த ஊழியருக்கென இரண்டு வேறு அமைப்புக்கள்…
அருமைத்தலைவர் ஜெகனால் அன்றே உருவாக்கப்பட்ட TMTCLU
தோழர். மதிவாணனால் பிற்காலத்தில் அமைக்கப்பட்ட NFTCL
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்…
சங்கங்கள் இரண்டுபட்டால் தொழிலாளிக்குத் திண்டாட்டம்…
குத்தகைக்காரனுக்கும் பொறுப்பற்ற நிர்வாகத்திற்கும் கொண்டாட்டம்…
எனவேதான் ஒன்றுபட்ட அமைப்பை உருவாக்க வேண்டிய 
சிந்தனை இன்று நம்மிடையே வலுப்பெற்றுள்ளது...

அன்று…
NFTE என்னும் மாபெரும் இயக்கம் எழுந்து போராடியதால்…
ஆயிரக்கணக்கான அன்றாடக்கூலி RTPக்களும்…
லட்சக்கணக்கான மஸ்தூர்களும் நிரந்தரம் பெற்றனர்..

இன்று…
அடிமட்ட ஊழியருக்காகப் போராடவேண்டிய நமது சங்கங்கள் 
தங்களுக்குள்ளே போராடிக்கொண்டு இருக்கின்றன....
சங்கங்கள் தொழிலாளிக்கு சங்கடங்களாகி விட்டன....
NFTE தலைமையில் இரண்டு சங்கங்கள் என்பது பலவீனமே…
உரிமை இழந்து தவிக்கும் அடிமட்ட ஊழியருக்கு சுகவீனமே….

எனவே…
ஒன்றுபட்ட ஒப்பந்த ஊழியர் சங்கத்தை உருவாக்குவது…
நமது கடமையாகும்… காலத்தின் கட்டாயமாகும்…
ஒற்றுமைக்கு என்றென்றும் வழிகாட்டும் தமிழ்மாநிலச்சங்கம்…
ஒப்பந்த ஊழியர் உயர்விற்காக இப்போதும் வழிகாட்டுகிறது….

2019 ஜனவரி 19 அன்று சென்னையில்…
NFTE தமிழ்மாநிலச்சங்க அலுவலகத்தில்…
TMTCLU மற்றும் NFTCL சங்கங்கள் 
தமிழகத்தில் ஒன்றிணைக்கப்படுகின்றன…

இனி ஒப்பந்த ஊழியருக்காக.... 
ஒரே சங்கமாக… ஒரே கொடியாக... 
ஒரே குரலில்.. ஒரே கொள்கைவழியில்… 
நமது ஒப்பந்த ஊழியர் சங்கம் தன் வர்க்க கடமையாற்றும்…
புதிதாக உருவாக்கப்படும் ஒப்பந்த ஊழியர் சங்கம்…
இந்திய தேசத்தின் முதல் சங்கம் AITUCயால் வழிநடத்தப்படும்…
இணையற்ற சங்கம் NFTEயால் தலைமை தாங்கப்படும்.. 

தோழர்களே…
கரம் இணைத்து… கடமை செய்வோம்…
தடை உடைத்து... உரிமை காப்போம்…
ஒன்றிணைவோம்... உயர்வு பெறுவோம்...
அணி திரள்வீர்… அன்புத்தோழர்களே..

 அனைவரையும் அன்புடன் அழைக்கும்
TMTCLU மற்றும் NFTCL தமிழ்மாநிலச்சங்கங்கள்

No comments:

Post a Comment