Wednesday 30 January 2019

வாய்மையே வெல்லும்..

ஜனவரி 30 – தியாகிகள் தினம்…
மகாத்மா மறைக்கப்பட்ட நாள்…

வாய்மையன்றி வேறு  ஒரு கடவுள் உலகில் இல்லை…
ஒளி வீசும் சூரியனை விட பலகோடி மடங்கு
ஒளி படைத்தது வாய்மை…

அந்த வாய்மையைத் தரிசனம் செய்திட 
ஒரே வழி அகிம்சையாகும்…
அந்த அகிம்சையைக் கடைப்பிடிக்க 
ஒரே வழி உள்ளத்தை தூய்மையாக்குவது…

உள்ளத்தூய்மை என்பது அவ்வளவு எளிதானதன்று…
உலகை ஆயுதங்களால் வென்று விடலாம்…
உள்ளத்து குரோத உணர்ச்சிகளை எளிதாக வெல்ல இயலாது…

வாய்மையை பல சமயங்களில் 
நாசகார சக்தி வெற்றி கொள்ளும்…
ஆனால் நாசகார சக்தியின்  வெற்றி வரலாறாகாது…

வாய்மை பல சமயங்களில் தோற்றுப்போகலாம்….
ஆனாலும் வாய்மையின் தோல்வி கூட வரலாறாகும்…
வாய்மை தோற்றாலும் வெல்லும்…
வாய்மை வெல்லும்… வாய்மையே வெல்லும்…

அண்ணல் மகாத்மா காந்தி 
 ----------------------------------------------------------------------------------
அகிம்சை வழி நடப்போம்…
அண்ணல் நினைவைப் போற்றுவோம்…

No comments:

Post a Comment