Sunday 7 July 2019


அன்பே தவம்...  

அன்பே சிவம்... அன்பே தவம்...
என்று வாழும் குன்றக்குடி
தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்களின்
நாண்மங்கலப்பெருநாளான 03/07/2019 அன்று
மூத்த தோழர்.முருகன் தலைமையில்
NFTE மற்றும் கலைஇலக்கியப்பெருமன்ற தோழர்கள்
அவரைச் சந்தித்து வணங்கிவாழ்த்துக்கள் பெற்றோம்...
நலம் வாழ வாழ்த்துக்கள் சொன்னோம்...

அன்புமிகு அடிகளார் அவர்கள்
அமெரிக்கா சென்று  பல்வேறு இடங்களில்
தமிழுக்குப் பெருமை சேர்த்து...
அன்பிற்கு வலிமை சேர்த்து...
இணக்கத்திற்கு இனிமை சேர்த்து...
தனது 22 நாள் அமெரிக்கப்பயணத்தை முடித்துவிட்டு
தற்போது குன்றக்குடி திரும்பியிருந்தது  குறிப்பிடத்தக்கது....

அவரது அமெரிக்கப்பயணத்தைப் பற்றிக்கேட்டோம்...
அமெரிக்க தேசத்தின் சுத்தம் தன்னை
அதிசயப்படுத்தியதாக அடிகளார் சொன்னார்...
அவரவர் பணியை அவரவரே செய்யும் நிலைபற்றி வியந்தார்...

பல்வேறு செய்திகளைச் சொன்ன அவர் கடைசியாக சொன்னார்..
அமெரிக்கர்கள் வரலாற்று நிகழ்வுகளை...
வரலாற்று முக்கியத்துவங்களை
மிக அழுத்தமாக... பதிவு செய்து வைத்துள்ளனர்....
எந்த நாட்டவர் பார்த்தாலும்...
எந்த இனத்தவர் பார்த்தாலும்...
வருங்காலத்தலைமுறைகள் பார்த்தாலும்...
வரலாற்று உண்மைகள் அப்படியே அவர்களுக்கு
உரைக்கும் வகையில் அங்கே பதியப்பட்டுள்ளன...

நாம் நமது தேசத்தில்...
வரலாற்று உண்மைகளை.. நிகழ்வுகளை...
அழுத்தமாகப் பதிவு செய்யத்தவறி விட்டோம்...
விளைவு...
மகாத்மாக்கள் மறக்கடிக்கப்படுகின்றார்கள்...
கோட்சேக்கள் கொண்டாடப்படுகின்றார்கள்...
என்று சொல்லி முடிக்கும்போது...
நமது இதயம் கனத்தது...

உண்மைதான்..... இன்று... இங்கு... இந்திய தேசத்தில்...
மகாத்மாக்கள் மறக்கடிக்கப்படுகின்றார்கள்...
கோட்சேக்கள் கொண்டாடப்படுகின்றார்கள்...
அர்த்தமுள்ள வார்த்தைகள்... 
அழுத்தமான வார்த்தைகள்...

உடுத்துவது காவியானாலும்..
உணர்த்துவது நீதி என்று வாழும்...
பொதுவுடமை போற்றும்.... சமத்துவம் போற்றும்...
சமுதாய முனிவரை வாழ்க... பல்லாண்டு என
வாழ்த்தி வணங்கி விடை பெற்றோம்....

No comments:

Post a Comment