Saturday 27 July 2019


கண்டன ஆர்ப்பாட்டம்

N F T E 
தமிழ்மாநிலச்சங்க அறைகூவலின்படி
சென்னைக் கூட்டுறவு சங்க கொடுமைகளை எதிர்த்து
தமிழகம் தழுவிய 
கண்டன ஆர்ப்பாட்டம்
-------------------------------------------------------------------
09/08/2019 – வெள்ளிக்கிழமை – மதியம் 12.00 மணி
சென்னைக் கூட்டுறவு சங்க கிளை அலுவலகம் 
எல்லீஸ் நகர் –  மதுரை.
-------------------------------------------------------------------
சென்னைக் கூட்டுறவு சங்க நிர்வாகமே...
உறுப்பினர்களின் வியர்வைப் பணத்தில் வாங்கப்பட்ட
  • வெள்ளனூர் நிலத்தை விற்காதே...
  • விற்ற நிலத்தைத் திரும்பப்பெறு...
  • வெள்ளனூர் நிலம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடு...
  • கடன் விண்ணப்பித்த உறுப்பினர்களுக்கு உடனடியாக கடனைப்  பட்டுவாடா செய்...
  • இறந்த போன உறுப்பினர் வாரிசுகளுக்கு பணப்பலனை தொடர்ந்து  இழுத்தடிக்காதே....
  • ஓய்வு பெற்ற உறுப்பினர்களுக்கு ஓரவஞ்சனை செய்யாதே...
  • கணக்கு முடித்த உறுப்பினர்களுக்கு பணப்பட்டுவாடா தாமதம் செய்யாதே...
  • கூட்டுறவு சங்க சொத்தைக் கொள்ளையடிக்காதே...
-------------------------------------------------------------------
தோழர்களே...
ஓராண்டு காலம் உறங்கிக்கிடந்தது போதும்...
சுரண்டிக்கொழுப்பதைக் கண்டு சும்மா நாமும் இருக்கலாமா?
நம்முடைய உதிரத்தில்... வியர்வையில் உருவான..
கூட்டுறவு சங்கம் கொள்ளை போவதைத் தடுத்திட வேண்டாமா?...
வட்டிக்கு கடன் கொடுக்க வக்கில்லாத நிலை மாற்ற வேண்டாமா?...
அநீதி களைந்திட... அணி திரள்வீர்... ஆர்ப்பரிப்பீர்...
-------------------------------------------------------------------
NFTE மதுரை மற்றும் 
காரைக்குடி மாவட்டச்சங்கங்கள்

No comments:

Post a Comment