Wednesday 31 July 2019


அனைத்து சங்க ஆர்ப்பாட்டம்

ஆ க ஸ் ட்  2...
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப்போக்கைக் கண்டித்து
அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும்
தேசியத்தொழிற்சங்கங்கள் பங்கேற்கும்
நாடுதழுவிய 
கண்டன ஆர்ப்பாட்டம்
-------------------------------------------------------------------
02/08/2019 – வெள்ளி – காலை 10 மணி
ஐந்து விளக்கு – காரைக்குடி
-------------------------------------------------------------------
02/08/2019 – வெள்ளி – காலை 11.00 மணி
அரண்மனை வாசல் – இராமநாதபுரம்
-------------------------------------------------------------------
02/08/2019 – வெள்ளி - மாலை 05 மணி
நடராஜ் தியேட்டர் – மதுரை
-------------------------------------------------------------------
மத்திய அரசே...
  • முதலாளிகளுக்கு ஆதரவாகத்தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தாதே...
  • பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்காதே...
  • அம்பானி நிறுவனத்தை  வளர்க்காதே...
  • அரசு நிறுவனமாம் BSNLஐச் சீர்குலைக்காதே...
  • சேலம் உருக்காலை உள்ளிட்ட மூன்று உருக்காலைகளை தனியார்மயமாக்காதே...
  • 41 பாதுகாப்புத் தொழிற்சாலைகளில் தனியாருக்கு இடம்கொடுக்காதே....
  • உருப்படியான இரயில்களை உருப்படாத தனியாருக்கு தாரை வார்க்காதே...
  • ICF போன்ற இரயில்பெட்டித் தொழிற்சாலைகளில் தனியாரை அனுமதியாதே...
  • மோசமான மோட்டார் வாகனச்சட்டத் திருத்தத்தை திரும்பப்பெறு...
  • குறைந்தபட்ச ஊதியம் மாதம் 18000 நிர்ணயம் செய்...
  • போராடிப்பெற்ற 8 மணி வேலை நேரத்தை மாற்றாதே...
  • போனஸ் சட்டத்தில் புரட்டுக்கள் பண்ணாதே...
  • முறைசாரா உழைப்பாளர் சமூகப் பாதுகாப்பு சட்டங்களைத் திருத்தாதே...
  • கிராமப்புற ஏழைகள் பயனடையும் 100 நாள் திட்டத்தை முடக்காதே...
------------------------------------------------------------
தோழர்களே...
போராடிப்பெற்ற உரிமைகளையும்...
தொழிலாளர் நலச்சட்டங்களையும்...
தொழிலாளர் நலனுக்கு எதிராக மாற்றியமைக்கும்...
மக்கள் விரோத... தொழிலாளர் விரோத... பொதுத்துறை விரோத
மத்திய அரசின் கேடுதரும் செயல்களைக் கண்டித்து...
அணி திரள்வீர்... ஆர்ப்பரிப்பீர்....

No comments:

Post a Comment