Wednesday 22 December 2021

 ஒப்பந்த ஊழியர் விடுபட்ட சம்பளம்

 

தோழர்களே....

நமது TMTCLU ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் முயற்சியால் வழக்குமன்ற முடிவின்படி ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள நிலுவை வழங்கப்பட்டது நாம் அறிந்ததே.

இன்னும் தமிழகம் முழுவதும் 380 தோழர்களுக்கு ரூ. 33,72,477/= சம்பளப் பாக்கி உள்ளது.

அந்த விடுபட்ட ஊழியர்கள் தங்களது தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை அணுகி தங்களது சம்பளப்பாக்கியைப் பெறுவதற்கு உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவும்.

காரைக்குடியில் இன்னும் 23 தோழர்களுக்கு சம்பளப்பாக்கி உள்ளது. அவர்கள் இன்று 23/12/2021 மதுரை சொக்கிகுளத்தில் அமைந்துள்ள தொழிலாளர் துணை ஆணையர் அலுவகத்திற்கு உடனடியாக கீழ்க்கண்ட ஆதாரங்களோடு நேரில் வரவேண்டும்.

👉ஆதார் அட்டை

👉வங்கி சேமிப்பு புத்தகம். 

இந்த வாய்ப்பே இறுதியானது. 

தோழர்கள் தவறாமல் மதுரை தொழிலாளர்

ஆணையர் அலுவகத்திற்கு நேரில் வரவும். 

நமது முன்னணித் தோழர்கள் 

கவனம் செலுத்தவும். 

 

No comments:

Post a Comment