Friday 1 December 2017

மீலாது….
மீலாது...
நபி வழி தவறினால் உலகம் மீளாது…

உன் தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது...

ஏழைகளின் கண்ணீர்  கூரிய வாளுக்கு ஒப்பாகும்

கூலியாளின் வியர்வை உலர்வதற்கு முன்
அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்...

தன் அடிமைகளின் மீதும்… பணியாட்களின் மீதும்...
தன் அதிகாரத்தை தவறாக உபயோகிப்பவன்
சொர்க்கம் செல்ல மாட்டான்...

தன் பக்கத்தில் இருக்கும் அண்டை  வீட்டார்  பசித்திருக்க
தான் மட்டும் வயிறார உண்பவர்  
நல்ல இறையாளராக இருக்க முடியாது...

இலஞ்சம் வாங்குபவர் மீதும்
இலஞ்சம் கொடுப்பவர் மீதும்….  
இறைவனின் சாபம் உண்டாகட்டும்...

நபி மொழி சொல்வோம்….
நபி வழி செல்வோம்… 

No comments:

Post a Comment