Tuesday 12 December 2017

செவிப்பறை அதிரட்டும்… 

ஊதிய மாற்றம் மறுப்பதை எதிர்த்து…
செல்கோபுரங்களைப் பிரிப்பதை எதிர்த்து…

அனைத்து அதிகாரிகள்… ஊழியர்கள்…
இரண்டு நாள் வேலை நிறுத்தம்…
இந்திய தேசம் முழுக்க…
உணர்வுடன் துவங்கி விட்டது…

ஓய்வு பெற்ற ஊழியர்கள்…
ஒப்பந்த ஊழியர்கள்…
நிரந்தர ஊழியர்கள்…
ஓரணியில் நின்று…
ஒற்றுமையாய்..
உரிமைக்குரல் எழுப்புகின்றனர்....

கண்ணிருந்தும் குருடாய்…
காதிருந்தும் செவிடாய்…
அதிகார வர்க்கம் அமைதி காக்கின்றது…

நாளையும் உரக்க குரல் கொடுப்போம்…
மூடிய இமைகள் விழிக்கட்டும்…
மூட செவிகள் திறக்கட்டும்….

நம் உரிமைக்குரலின் சத்தம்…
நாளை இன்னும் ஓங்கி ஒலிக்கட்டும்…

No comments:

Post a Comment