Monday 23 April 2018


குறுஞ்செய்திகள்

01/04/2018 IDA உயர்விற்கான BSNL உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது.

JE இலாக்காத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

BSNL ஊதாரிச்செலவினங்களைக் கட்டுப்படுத்த ஆலோசனைக்கூட்டம் 09/05/2018 அன்று டெல்லியில் நடைபெறுகிறது.

தற்காலிக ஓய்வூதியம் PROVISIONAL PENSION பெறுவோரின் 
ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

NFTE தமிழ்மாநிலச்செயற்குழு 14/05/2018 
அன்று கரூரில் நடைபெறுகிறது.

நட்டத்திலிருந்து விதிவிலக்குப் பெற மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறவேண்டும் என DPE இலாக்கா 
DOTக்கு கடிதம் எழுதியுள்ளது.

மருத்துவத்திட்டத்தில் ரூ.3500/=க்கு மேல் அதிகமாக வருமானம் உள்ள குடும்ப உறுப்பினர்களை சேர்க்க இயலாது. இந்த உச்சவரம்பை உயர்த்திட நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. 7வது ஊதியக்குழுவில் தற்போது குறைந்தபட்ச உச்சவரம்பு ரூ.9000/= 

மத்தியப்பிரதேசத்தில் BSNL நியமன அதிகாரிகளுக்கு 
புதிய ஆயுள் காப்பீட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஊழியர்களையும் சேர்க்க வேண்டும் என 
நமது சங்கம் கோரிக்கை எழுப்பியுள்ளது.

பன்முகத்திறன் கொண்ட பதவிகளை உருவாக்கிட 
நமது சங்கம் கோரிக்கை எழுப்பியுள்ளது.

No comments:

Post a Comment