Sunday 29 April 2018


இராமநாதபுரம் வெள்ளி விழா மாநாடு

21/04/2018 அன்று இராமநாதபுரம் கிளையின்
வெள்ளிவிழா  மாநாடு தொலைபேசி நிலைய வளாகத்தில்
கிளைத்தலைவர் தோழர்.அமலநாதன்
அவர்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.

பணி நிறைவு பெற்ற தோழர்கள்.அமலநாதன்,
கோபிநாதன் ஆகியோருக்கு பணிநிறைவு விழா
தோழர்களின் வாழ்த்துரையோடு சீரோடு நடைபெற்றது.

செயல்பாட்டறிக்கை, நிதியறிக்கை, அமைப்புநிலை விவாதம்,
தேங்கியுள்ள பிரச்சினைகள்…. தீர்மானங்கள் என
கிளை மாநாடு சிறப்பாகச் செயல்பட்டது.

இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின்
இராமநாதபுரம் மாவட்டச்செயலரும்,
AITUCன் முன்னோடித்தலைவரும் வழக்கறிஞருமான
தோழர்.முருகபூபதி சிறப்புரையாற்றினார்.
NFTE மாநில அமைப்புச்செயலர் தோழர்.சுபேதார் அலிகான்
NFTCL மாவட்டச்செயலர் தோழர்.B.முருகன்
NFTCL மாவட்டத்தலைவர் தோழர்.C.முருகன்
AIBSNLPWA கிளைச்செயலர் தோழர்.இராமமூர்த்தி
AIBSNLEA மாவட்டத்தலைவர் தோழர்.தமிழ்மாறன்
NFTE காரைக்குடி கிளைச்செயலர் தோழர்.ஆரோக்கியம்
NFTE இராமேஸ்வரம் கிளைச்செயலர் தோழர்.சேதுராஜன்
NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி 
மூத்த தோழர்கள். காந்தி... ஜெயபாலன்...
மற்றும் பல தோழர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

கீழ்க்கண்ட நிர்வாகிகள் 
ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் : தோழர். R.இராமமூர்த்தி – JTO

செயலர் : தோழர். M. அரியமுத்து – JE
இணைச்செயலர் : தோழர்.K.அப்துல் மூமின் - OS 
பொருளர் : தோழர்.முருகேசன் – TT

நீண்ட பாரம்பரியமும் போர்க்குணமும் மிக்க
இராமநாதபுரம் கிளை சங்கச்செயல்பாட்டில்...
தொடர்ந்து முத்திரை பதிக்க நமது வாழ்த்துக்கள்…

No comments:

Post a Comment