Wednesday 11 April 2018


EPF ஓய்வூதியப் பங்களிப்பு

EPF எனப்படும் ஊழியர் வைப்புநிதி BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கப்படுகின்றது.
ஒப்பந்த ஊழியர்களுக்கும் இதுவே பொருந்தும்.
தற்போது ஊழியர்கள் பெறும் மாதச்சம்பளத்தில் 
BASIC + IDA அடிப்படைச்சம்பளம் மற்றும் விலைவாசிப்படியில்
12 சதம் வைப்புநிதியாக ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படுகின்றதுஅதே 12 சதத்தொகையை நிர்வாகம் தனது பங்களிப்பாக ஊழியர் வைப்புநிதிக்கு அளிக்கின்றது.

ஊழியரிடமிருந்து பிடிக்கப்படும் தொகை நேரடியாக அவரது சேமிப்புக்கணக்கில் செல்கின்றதுநிர்வாகம் செலுத்தும் தொகை சேமிப்பு மற்றும் ஓய்வூதியப்பங்களிப்பு என இருவகையாகப் பிரிக்கப்பட்டு செலுத்தப்படுகின்றது.

EPF நிர்வாகம் ஓய்வூதியப்பங்களிப்பிற்கு 
ஊதிய உச்சவரம்பு WAGE CEILING நிர்ணயித்துள்ளது.
ஊழியர்கள் பெறும் சம்பளத்தின் அளவு கூடுதலாக இருந்தாலும்
EPF நிர்வாகம் நிச்சயித்துள்ள உச்சவரம்பின் அடிப்படையில்தான் ஓய்வூதியப்பங்களிப்பு செய்ய இயலும்.

உச்சவரம்புத்தொகையில் 
8.33 சதம் ஓய்வூதியப்பங்களிப்பு  வழங்கப்படுகின்றது.
ஓய்வூதியப்பங்களிப்பு உச்சவரம்பு...
01/06/2001 முதல் 31/08/2014 வரை ரூ.6500/=எனவும்
01/09/2014 முதல் ரூ.15000/= எனவும் உயர்த்தப்பட்டன.
தற்போது ரூ.15000/=ல் 8.33 சதம் அதாவது ரூ.1250/= 
உயர்ந்தபட்ச ஓய்வூதியப்பங்களிப்பாக வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் 15000க்கும் அதிகமாக கூடுதல் சம்பளம் பெறும் ஊழியர்கள் சிலர் தங்களது தற்போதைய வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியப்பங்களிப்பு இருக்க வேண்டும் என வழக்குமன்றம் சென்றனர். உச்சநீதிமன்றமும் அவர்களது கோரிக்கை நியாயமென்றும் அவர்கள் தற்போது வாங்கும் சம்பளத்தின் ACTUAL WAGE அடிப்படையில் ஓய்வூதியப்பங்களிப்பு இருக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.

எனவே 15000க்கும் அதிகமாக சம்பளம் பெறும் ஊழியர்கள்
தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தங்களது நிர்வாகத்தின் மூலமாக விருப்பக்கடிதங்களை அளிக்க வேண்டும் என EPF நிர்வாகம் எல்லாத்துறைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

நமது BSNL தமிழ்மாநில நிர்வாகமும் ஊழியர்கள் தங்களது விருப்பங்களை 15/04/2018க்குள் சம்பந்தப்பட்ட கணக்கு அதிகாரி மூலமாக தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அதற்கான இரு படிவங்களில் கையெழுத்திட்டு கணக்கு அதிகாரி சம்பளப்பட்டுவாடாவிற்கு தோழர்கள் தங்களது விருப்பங்களைத் தெரிவிக்க வேண்டும்.

இதன் மூலம் EPS எனப்படும் ஓய்வூதியம் கூடுதலாக கிடைக்கும்.  
தற்போது 15000/= உச்சவரம்புத்தொகையில் ரூ.1250/= பங்களிப்பு செய்வோருக்கு பணிக்கால ஓய்விற்குப்பின்...
ஓய்வூதியம் மாதம் ரூ.7500/= என்றளவில் கிடைக்கும்.
மாதச்சம்பளம் ரூ.30000/= பெறுபவர்கள் ரூ.2500/= என்ற பங்களிப்பு செய்து மாதம் ரூ.15000/= ஓய்வூதியமாகப் பெறலாம்.

BSNL நேரடி ஊழியர்கள் ஓய்வு பெறும் காலங்களில் இந்த ஓய்வூதியம் பலன் தருவதாக அமையும்.
வைப்புநிதியில் 35 வருடம் உறுப்பினர்களாக நீடித்தவர்களுக்கு மட்டுமே முழு ஓய்வூதியம் கிட்டும்.
குறைந்த சேவைக்காலம் கொண்டவர்களுக்கு
அதற்கேற்ற PROPORTIONATE ஓய்வூதியம் கிட்டும்.  
எனவே மாதம் ரூ.15000/=க்கும் அதிகமாக சம்பளம்  வாங்கும் தோழர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியப்பங்களிப்பு செய்வதற்கு விருப்பம் தெரிவிக்கலாம்.

CASE STUDY – எடுத்துக்காட்டு உதாரணம் – தற்போதைய நிலை

Name
SHANMUGAVALLI A
Designation
Office Superintendent
UAN No
100348000000
EPF Account No.
TN/50110/904
Gross Monthly Wages
41,124.00
Current Basic
17,130.00
Current DA
21,738.00
Total Current Salary for EPF
38,868.00
Pension Salary
15,000.00
Employee Contribution on Current  Salary
4,664.00
Employer Contribution (Pension) 8.33 on  15000/=
1,250.00
Employer Contribution (EPF)
3,414.00
Total Employer Contribution
(Pension+EPF savings)
4,664.00
EDLI Contribution
75.00
PF Admin Charges
253.00
Total EPF Payable
9,656.00

மேலே கண்ட ஊழியருக்கு தற்போது...
அவர் வாங்கும் சம்பளத்தில் ஓய்வூதியப்பிடித்தம் செய்தால்…
ஓய்வூதியப்பங்களிப்பு ரூ.38,868/=ல் 8.33 சதம் =       ரூ.3238/=
சேமிப்பு கணக்கில் செலுத்தப்படுவது (ரூ.4664 – 3238)= ரூ.1426/=

நிர்வாகத்தைப் பொறுத்தவரை அதனுடைய பங்களிப்பு 
ரூ.4664/- என்பதில் மாற்றம் இல்லை.

தற்போது ரூ.4664/= என்பது 
ரூ.1250 + 3414 என்று பிரித்தளிக்கப்படுகின்றது.
வாங்கும் சம்பளத்தில் விருப்பம் தெரிவித்தால்
ரூ.4664/= என்பது ரூ.3238 + ரூ.1426/= என்று பிரித்தளிக்கப்படும்.

ரூ.15000/= உச்சவரம்பில் ஓய்வூதியப்பங்களிப்பு செய்தால் ஓய்வூதியம் மாதம் ரூ.7500/= கிடைக்கும்.
ACTUAL WAGE ரூ.38868/=ல் விருப்பம் தெரிவித்தால்
ஏறத்தாழ ரூ.19400/= மாத ஓய்வூதியமாக கிடைக்கும்.

சேமிப்பில் அதிகப்பணம் சேரவேண்டும் என்று எண்ணுவோர் அப்படியே விட்டுவிடலாம். கூடுதலாக ஓய்வூதியம் வேண்டும் என்று எண்ணுவோர் தங்களுடைய வாங்கும் சம்பளத்தில் ஓய்வூதியப்பங்களிப்பு செய்வதற்கு விருப்பம் தெரிவிக்கலாம்.
இது முழுக்க முழுக்க ஊழியர்களின் தனிப்பட்ட விருப்பமாகும்.
தோழர்கள் சிந்தித்து முடிவெடுக்கவும்.

2 comments:

  1. Sir
    Whether the same is implemented from date of joining or any cut off date is there.

    ReplyDelete
    Replies
    1. on receipt of joint option of the employer and employee

      Delete