Wednesday 25 April 2018


ஓய்வு பெற்றோர் மருத்துவப்படி

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான மருத்துவப்படி
01/10/2017 முதல் 31/03/2018 வரையிலான
இரண்டு காலாண்டுகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது.  
மருத்துவப்படி வழங்கியதால் BSNLக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து வழங்கிட நிர்வாகம் தயக்கம் காட்டியது.

ஆனாலும் மூத்த தோழர்களின் கோரிக்கையைக் கணக்கில் கொண்டு 01/10/2017 முதல் 31/03/2018 வரையிலான காலத்திற்கு  மருத்துவப்படி வழங்கிட நிர்வாகம் 
இன்று 25/04/2018 உத்திரவிட்டுள்ளது.

இந்த நிதியாண்டில் 2018-19ல் மருத்துவப்படி தொடருமா?
 என்பது பற்றி நிர்வாகம் விரைவில் தனது முடிவை 
அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய நிதி நெருக்கடியில்
மருத்துவப்படி மீண்டும் தொடராது என
நிர்வாகம் முடிவெடுக்கும் என்றே தோன்றுகிறது.

ஆனாலும்...நமது நிறுவனத்தில் ஊதாரித்தனமாக
பல கோடி ரூபாய்கள் வீணடிக்கப்படுகின்றன.
பல்லாண்டு உழைத்த தோழர்களுக்கு...
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு…
மூத்த குடிமக்களுக்கு தொடர்ந்து
மருத்துவப்படியை வழங்குவதே சரியானதாக இருக்கும்.

நிர்வாகம் என்ன செய்யப்போகின்றது
என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

No comments:

Post a Comment