Saturday 7 July 2018


நெகிழ்வான நிகழ்வு….


ஞானத்தந்தை தோழர்.ஞானையா அவர்களின்
முதலாமாண்டு புகழஞ்சலிக்கூட்டம்
07/07/2018 அன்று காரைக்குடி NFTE சங்க அலுவலகத்தில்
மூத்த தோழர்.பூபதி அவர்களின் தலைமையில் நெகிழ்வுடன் நடைபெற்றது.
அஞ்சல் பகுதியின் மூத்த தோழர்.இராமன் அவர்கள்
தோழர். ஞானையாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி
புகழஞ்சலியைத் துவக்கி வைத்தார்.
தூயதலைவனின் திருவுருவப்படத்தை
தூயபணியாம் துப்புரவுப்பணி செய்யும்
அருமைத்தோழர்கள் மலரால் அலங்கரித்திருந்தனர்.

நினைவேந்தல் நிகழ்ச்சியில்…
ஓய்வூதியர் சங்க மாவட்டச்செயலர் தோழர்.முருகன்,
ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் தோழர்.முருகன்,
NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி ஆகியோர் நினைவுரையாற்றினர்.
ஓய்வு பெற்ற தலைமைத்தபால் அதிகாரி
தோழர்.முத்துராக்கு கவிதாஞ்சலி நிகழ்த்தினார்.
தபால் தந்தி ஊழியர்கள் வரலாற்றில் தனி முத்திரை பதித்த
தன்னிகரில்லாத் தலைவனின்
நினைவேந்தல் நிகழ்வு நெகிழ்வுடன் முடிவுற்றது.

No comments:

Post a Comment