Sunday 29 July 2018


உண்ணா நோன்பும்… ஒற்றுமையின் மாண்பும்… 

BSNL அனைத்து  தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக
மூன்று நாள் உண்ணாநோன்பு போராட்டம்
நாடு முழுக்க எழுச்சியோடு நடந்து முடிந்துள்ளது.

காரைக்குடி மாவட்டத்தில்… 
மூன்று இடங்களில்...
மூன்று நாட்களும்... 
முழுமுனைப்போடு...
முழுவீச்சில் போராட்டம் நடைபெற்றது.

24/07/2018 அன்று காரைக்குடியில்
அனைத்து சங்க மாவட்டச்செயலர்கள் தலைமையில் நடைபெற்றது.
AIBSNLEA மூத்த தலைவர் தோழர்.மோகன்தாஸ் துவக்கிவைத்தார்.
AITUC மூத்த தலைவர் 
தோழர்.பழ.இராமச்சந்திரன் நிறைவுரையாற்றினார்.

25/07/2018 அன்று சிவகங்கையில்
தோழர்.குமரேசன் SNEA..
தோழர்.இராமச்சந்திரன் AIBSNLPWA கூட்டுத்தலைமை வகித்தனர்.
BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.பூமிநாதன் துவக்கி வைத்தார்.
NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி நிறைவுரையாற்றினார்.

26/07/2018 அன்று இராமநாதபுரத்தில்
தோழர்.இராமமூர்த்தி… NFTE…
தோழர்.சண்முகம் AIBSNLPWA கூட்டுத்தலைமை வகித்தனர்.
AIBSNLPWA மூத்த தோழர்.ஜெயபாலன் துவக்கி வைத்தார்.
CPI மாவட்டச்செயலர் வழக்கறிஞர் தோழர்.முருகபூபதி…
NFTE மாநில அமைப்புச்செயலர் தோழர்.சுபேதார் அலிகான்…
ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
NFTE மூத்த தலைவர் தோழர்.சேது நிறைவுரையாற்றினார்.

மூன்று நாட்களும்  மூன்று இடங்களிலும்…
முழுமையாகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
ஓய்வு பெற்ற மூத்த தோழர்கள்…
ஓய்வின்றி உணர்வுடன் கலந்து கொண்டனர்…
அனைவருக்கும் போராட்ட வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்…

தோழர்களே…
இதுவே பெரும்பகுதி தோழர்களின் கடைசி ஊதியமாற்றம்…
இதனை அடையாமல் நாம் ஓய்ந்திருக்க மாட்டோம்…
இமைப்பொழுதும் ஒற்றுமையை நாம்…
இழக்க மாட்டோம்…

இனி எப்போது அடுத்த கட்டப்போராட்டம்…?
இதுவே தோழர்களின்…
இன்றைய… கேள்வி…
இப்போதைய கேள்வி…
இதோ…
இன்னும் அணையாமல் எரிகிறது…
இணைந்த போராட்ட வேள்வி…

No comments:

Post a Comment