Sunday 1 July 2018


மாநிலச்செயலர்கள் கூட்டம் 

நமது NFTE சங்க மாநிலச்செயலர்கள் கூட்டம்
 29/06/2018 மற்றும் 30/06/2018 ஆகிய தேதிகளில் அகில இந்தியத்தலைவர் தோழர்.இஸ்லாம் அவர்களின் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

3வது ஊதியத்திருத்தக்குழுவில் NFTE  சார்பாகத்
 தலைவர் இஸ்லாம் அகமது அவர்களும் பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர்சிங் அவர்களும் உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள். மேலும் ஊதியக்குழுவில்  NFTE சங்கத்திற்கு கூடுதல் உறுப்பினர்களை நிர்வாகத்திடம் கோருவது.

அடுத்த தேசிய செயற்குழுக்கூட்டம் ஹரித்துவாரில் 
அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறும்.

தேங்கிக்கிடக்கும் எண்ணற்ற ஊழியர் பிரச்சினைகள் 
தீர்விற்காக பலகட்டப்போராட்டங்களை நடத்துவது.

சம்பளத்தேதியை மாற்றி உத்திரவிட்ட BSNL நிர்வாகத்தின் மோசமான முடிவினை மாநிலச்செயலர்கள் கூட்டம் வன்மையாக கண்டிப்பதோடு அந்த உத்திரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது.

ஊதியத்திருத்தம் சம்பந்தமாக அமைக்கப்பட்ட நமது சங்கத்தின் ஊதியக்குழு பரிசீலனைக்கூட்டம் விரைவில் நடத்தப்படும். ஊதியக்குழு சம்பந்தமாக அனைத்து சங்கங்களுடனும் 
விவாதங்கள் நடத்தப்படும்.

No comments:

Post a Comment