Thursday 28 February 2019


எது வரினும் அஞ்சோம்… நில்லோம்…

ஊதிய உயர்வு கேட்டுப்போராடிய நாம்
இன்று ஊதியம் கேட்டுப்போராடும்
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்..

முதன்முறையாக…
BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு…
மாதத்தின் இறுதி நாளன்று சம்பளம் வழங்கும்
நடைமுறை தற்போது தகர்ந்துள்ளது…
காரணம் நிதிப்பற்றாக்குறை என்று சொல்லப்படுகின்றது.

ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி
தொடர் போராட்டங்களை நடத்திய நாம்…
இன்று நமது ஊதியத்திற்கே போராட வேண்டிய அவலம்..

இது திட்டமிடப்பட்ட சதிச்செயல்…
இது போன்ற அவலநிலையை உருவாக்கி
ஊழியர்கள் மனதில் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தி
அவர்களை விருப்ப ஓய்வுத்திட்டத்தில்…
அனுப்புவதுதான் அரசின் கொடிய திட்டமாகும்...

இந்த அநியாயத்தை எதிர்த்து…
பிப்ரவரி மாத சம்பளத்திற்கு உரிய நிதி வழங்கக்கோரி
நாடு முழுவதும் இன்று 01/03/2019
ஆர்ப்பாட்டம் நடத்திட
AUAB – அனைத்து சங்க கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.

இந்நிலை அகற்றிட.. இழிநிலை துடைத்திட…
எதுவரினும் அஞ்சோம்… நில்லோம்… சந்திப்போம்…
என்ற பாரதியின் வரிகளாய்..
எழுந்து ஒன்றாய்ப் போராடுவோம் தோழர்களே….

No comments:

Post a Comment