Wednesday 1 May 2019


நிதியை நிறுத்தாதே... 
உந்தன் அநீதியை நிறுத்து... 

ஒப்பந்த ஊழியர்களுக்குத் தமிழகத்தில்
பல மாவட்டங்களில்... பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
ஆனால் காரைக்குடி மாவட்டத்தில்  
மார்ச் மாதம் வரை சம்பளம் வழங்கப்பட்டு விட்டது.  
ஏப்ரல் மாத சம்பளம் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
ஆனால் ஏப்ரல் மாதம் சம்பளம் வழங்கிட இயலாது என ஒப்பந்தக்காரர்கள் தங்களது இயலாமையை
நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.

காரணம் ஒப்பந்தக்காரர்களுக்கு
டிசம்பர் 2018 முதல் மார்ச் 2019 வரை நான்கு மாத பில்கள்
நிர்வாகத்தால்  பட்டுவாடா செய்யப்படாமல் உள்ளன.  
நிதி ஒதுக்கீடு இல்லை என்ற 
ஒற்றைச்சொல்... வெற்றுச்சொல்...மட்டுமே பதிலாகத் தரப்படுகின்றது.

சமீபத்தில் தொழிற்சங்கத் தலைவர்களைச் சந்தித்த
நமது CMD தற்போது BSNLலில் நிதிநெருக்கடி
இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அப்படியானால் ஒப்பந்த ஊழியர் சம்பளத்திற்கு
நிதி ஒதுக்கிட என்ன தயக்கம் என்பது தெரியவில்லை.
பல மாவட்டங்களில் நன்கு பயிற்சியும் அனுபவமும் பெற்ற
ஒப்பந்த ஊழியர்கள் BSNL நிறுவனத்தை விட்டு விலகி
வேறு தொழிலுக்குச் செல்ல ஆரம்பித்து விட்டனர்.
செய்த வேலைக்கு கூலி கொடுக்காமல் இழுத்தடிப்பது இழிசெயலாகும். 

எனவே ஒப்பந்த ஊழியர்களுக்கு  சம்பளம் வழங்கிட CORPORATE அலுவலகம் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி தமிழகம் முழுவதும் 03/05/2019 அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்திட
NFTE தமிழ்மாநிலச்சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
-------------------------------------------------------------------
காரைக்குடி மாவட்டத்தில்...
இராமநாதபுரம், பரமக்குடி,
சிவகங்கை மற்றும் காரைக்குடி கிளைகளில்...
ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கிட
உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி...
ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
------------------------------------------------------------------
ஆ ர் ப் பா ட் ட ம்
03/05/2019 வெள்ளிக்கிழமை – மாலை 05 மணி
------------------------------------------------------------------
தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்
தலைமை : தோழர். அரியமுத்து – கிளைச்செயலர் NFTCW
--------------------------------------------------------------------
தொலைபேசி நிலையம் – பரமக்குடி
தலைமை : தோழர். மோகன்  – கிளைச்செயலர் NFTCW
--------------------------------------------------------------------
தொலைபேசி நிலையம் – சிவகங்கை
தலைமை : தோழர். பா.முருகன் – மாவட்டச்செயலர் – NFTCW
--------------------------------------------------------------------
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி
தலைமை : தோழர். சி. முருகன் – மாவட்டத்தலைவர் -  NFTCW
--------------------------------------------------------------------

தோழர்களே... 
அணி திரள்வீர்... ஆர்ப்பரிப்பீர்...

தோழமையுடன்
பா.முருகன் – மாவட்டச்செயலர் – NFTCW
வெ. மாரி – மாவட்டச்செயலர் – NFTE

No comments:

Post a Comment