Tuesday 14 May 2019

S S A  இணைப்பு
தமிழகத்தில் 6 சிறிய மாவட்டங்களை அருகில் உள்ள பெரிய மாவட்டங்களுடன் இணைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி திருச்சியில் 13/05/2019 அன்று
NFTE மாவட்டச்செயலர்கள் கூட்டம் நடைபெற்றது.
------------------------------------------------------------------
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

தற்போதைய சூழலில் SSA இணைப்பு என்பது BSNL நிறுவனத்திற்கு எந்தப்பலனும் அளிக்காது. மாறாக தற்போதைய சூழலையும் கெடுத்து விடும். எனவே BSNL நிர்வாகம் மாவட்டங்கள் 
இணைப்பு என்பதைக் கைவிடவேண்டும்.

அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக இது பற்றிக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இணைப்பு என்பது உறுதி செய்யப்பட்டால் அனைத்து சங்கங்களுடன் கலந்து 
அடுத்த கட்ட நடவடிக்கை முடிவு செய்யப்படும்.
-----------------------------------------------------------------
மாவட்டங்கள் இணைப்பினால் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என நிர்வாகம் 2015ல் தெளிவுபட உத்திரவிட்டுள்ளது. உபரியாக உள்ள ஊழியர்கள் SALES AND MARKETING பிரிவில் பயன்படுத்தப்படுவார்கள். எனவே ஊழியர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்களது சேவை பணி நிறைவு பெறும் வரை  
அந்தந்த மாவட்டங்களிலேயே தொடரும்.

சங்கங்கள் தங்களது எதிர்ப்புக்களைத் தெரிவித்திருந்தாலும் 
நிர்வாகம் மாவட்டங்கள் இணைப்பை வேகமாக முடுக்கி விட்டுள்ளது. எனவே தாமதம் ஆனாலும் மாவட்டங்கள் இணைப்பு நடந்தேறும் 
என்பதே இன்றைய நிலையாக உள்ளது.

No comments:

Post a Comment