Thursday 23 May 2019

மக்களவைத் தேர்தல் 


மக்களவைத் தேர்தல்
 ---------------------------------
மக்களுக்கான ஆட்சி...
மக்களால் நடத்தப்படும் ஆட்சி...
மக்கள் நலன் காக்கும் ஆட்சி...
மதவெறி கொள்ளா மாண்புமிகு ஆட்சி...
மக்கள் சொத்தைக் காக்கும் ஆட்சி..
மகாத்மா வழி செல்லும் ஆட்சி...
மலரும் என்று நம்பியிருந்தோம்...

இதோ மீண்டும்...
தனவணிகர் நலன் காக்கும்....
தாமரையின் ஆட்சியே மலர்ந்துள்ளது....
பத்துக் காகங்களின் கூக்குரல் முன்னே...
எட்டுக் குயில்களின் குரலோசை அடங்கிப்போகும்...
இதுவே நம் ஜனநாயகம்...

மே 23 கடந்து விட்டது...
வென்றவர்கள்... 
கிரீடங்களைச் சுமக்கின்றார்கள்...
மக்களோ வழக்கம் போல்... 
தங்கள் சுமைகளை...

காந்தி தேசம்...
காவி தேசமாகி விட்டது...

இனி... நாம்...
இமைகள் சோரமாட்டோம்...
சுமைகளால் வீழமாட்டோம்...
உணர்வுகளைக் கூர் தீட்டுவோம்...
உரிமைகளுக்காய் போராடுவோம்...
காந்தி தேசம்... மீட்டிட...
மக்கள் சொத்தைக் காத்திட...
அகிம்சை வழியில்...
அயராமல் செல்வோம்... 

1 comment: