Friday 24 May 2019


பல்லாண்டு வாழ்க... பயனுற வாழ்க...

தமிழ்ச்சங்கம் வளர்த்த மதுரையிலே...
தொழிற்சங்கம் வளர்த்த தலைவன்...

நெற்றிக்கண்ணைத் திறப்பினும்...
நியாயம் கேட்க அஞ்சிடாத  நக்கீரன்...

வேதனைகளில் வீழ்ந்திடாத வீரன்....
சோதனைகளில் சுடர்முகம் காட்டிய தீரன்...

தோழர்களிடம் இன்முகம் காட்டிய தோழன்...
சாதனைகளைச் சத்தமின்றி செய்த சரித்திரன்..

உரிமைக்கு குரல் கொடுத்த உணர்வாளன்...
ஒற்றுமைக்கு உருக்கொடுத்த சீராளன்...

பாதை மாறாத கொள்கைப் பற்றாளன்...
பதவிகளை  நாடாத தூய பரிசுத்தன்...

NFTE இயக்கத்தின் பெருமைமிகு போராளி...
BSNL நிறுவனத்தின் கடமைமிகு தொழிலாளி...

கண்ணியமிகு தலபதி... கட்டுப்பாடுமிகு தளபதி....
நான்மாடக்கூடலின் நாணயமிகு தலைவன்...
அருமைத்தோழர் மாவட்டத்தலைவர்...
சிவகுருநாதன் அவர்கள் ...
பல்லாண்டு காலம்...பல நூறு காலம்...
மண் பயனுற... மதுரை  பயனுற
வாழ்வாங்கு வாழ்ந்திட... வாழ்த்துகின்றோம்...

அன்புடன் வாழ்த்தும்...
NFTE - காரைக்குடி மாவட்டச்சங்கம்

No comments:

Post a Comment