Thursday 20 March 2014

செய்திகள் 

JCM தேசியக்குழுக்கூட்டம் 22/04/2014 அன்று நடைபெறும்.

20 இணைப்புக்களுக்கும் கீழான தொலைபேசி நிலையங்களை மூடுவதற்கு BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. அகன்ற அலைவரிசை மற்றும் அரசு அலுவலகங்களுக்கான இணைப்புக்கள் இருந்தால் 
தொலைபேசி நிலையம் தொடர்ந்து செயல்படும்.

TTA ஆளெடுப்பு விதி TTA RECRUITMENT RULES நிர்வாகக்குழுவின் ஒப்புதலுக்குப்பின்னர் BSNL  BOARD ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கார் பிறந்த தினம் 
அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2012ல்  JAO தேர்வெழுதி தோல்வியுற்ற பொதுப்பிரிவு OC தோழர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க இயலாது என BSNL நிர்வாகம் கைவிரித்துள்ளது. ஆயினும் புதிய  பாடத்திட்டத்தின் அடிப்படையில் விரைவில் JAO தேர்வு 
நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment