Tuesday 1 July 2014

மாறுமா.. 
விலைவாசிப்புள்ளி கணக்கீடு?

தற்போது IDA விலைவாசி குறியீட்டெண் என்பது 
இதய நோயாளிகளின் ECG போல 
ஏற்ற இறக்கமுடன் வெளிப்படுகின்றது. 
ஜனவரி 2014ல் 90.5 சதம் இருந்த IDA 
ஏப்ரலில் நம்மை உண்மையிலேயே முட்டாளாக்கி 
2.1 சதம் குறைந்து 88.4 சதம் ஆனது. 

தற்போது மீண்டும் விலைவாசி குறியீட்டெண் 
உயர்வினால் 2.9 சதம் உயர்ந்து 
மொத்தம் 91.3 சதம் ஆகியுள்ளது. 

அதே நேரம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 
கிடைக்க வேண்டிய CDA கடந்த ஆறு மாதங்களுக்கு 
7 சதம் உயர்வதற்கான வாய்ப்புள்ளது. 
தற்போதைய CDA 100 சதம். 
இது 107 சதமாக உயர்வதாக செய்திகள் கூறுகின்றன.  

பொதுத்துறை ஊழியர்களுக்கு 
ஜனவரி 2014க்குப்பின் ஜூன்  2014 வரை 
0.8 சதமே கூடியுள்ள விலைவாசிப்படி 
மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் 
7 சதம் கூடுவதின் மர்மம் மட்டும் நமக்கு விளங்கவில்லை. 

வரவு செலவு அறிக்கை சம்பந்தமாக 
அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் 
புதிய நிதியமைச்சரை சந்தித்தபோது 
அளித்த கோரிக்கைகளில் 
விலைவாசிக் குறியீட்டெண் 
கணக்கீட்டை மாற்ற வேண்டும் 
என்பதும் முக்கியமான கோரிக்கையாகும்.
 அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான 
விலைவாசிப்படி உயர்வு இருக்கும் வகையில்
 புதிய கணக்கீட்டு முறை இருக்க வேண்டும். 
இதற்கான குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

மாறாக விலைவாசிப்படி கூடினால் குதூகலிப்பதும்
குறைந்தால் கூச்சலிடுவதும் எந்த பலனையும் தராது.

No comments:

Post a Comment