Monday 7 July 2014

செய்திகள் 

IDA உத்திரவு
01/07/2014 முதல் 2.9 சதம் உயர்ந்துள்ள IDA உயர்விற்கான உத்திரவு DPE இலாக்காவால் 03/07/2014 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
BSNL உத்திரவு விரைவில் வெளிவரும்.

தர்ம தரிசனம் 
ஊழியர்கள் பிரச்சினை தீர்விற்காக வாரந்தோறும் புதன்கிழமை  
02.30 முதல் 04.30 வரை மாநிலம் மற்றும் மாவட்ட மட்டங்களில்  தொழிற்சங்கப்பிரதிநிதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சந்திக்க வேண்டும் என மாநில நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. காலம் காலமாக நடந்து வந்த ஒரு நடைமுறையைக்கூட அதிகாரிகளுக்கு 
தற்போது நினைவு படுத்த வேண்டியுள்ளது. 

ஒப்பந்த ஊழியர்கள் 
ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தினத்தில் சம்பளப்பட்டுவாடா மற்றும் உரிய சலுகைகளை தவறாமல் வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு வழக்கம்போல் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்களும் வழக்கம் போல் இல்லாமல் இருந்தால் சரி.

அஞ்சலி 
திருச்சி மாவட்டத்தின் மூத்த தோழர்.வெங்கடேசன் அவர்கள் மறைவிற்கு நமது இதயங்கசிந்த அஞ்சலியை உரித்தாக்குகின்றோம். 
தல விருட்சங்கள் தலை சாயும் காலமிது.. 
நாம் வேர்களாய்.. விழுதுகளாய் நின்று இயக்கம் காப்போம்..

No comments:

Post a Comment