Tuesday 12 August 2014

சீர் வளர்.. சிரில் அறக்கட்டளை ...

தோழர்.சிரில் அறக்கட்டளையின் 15ம் ஆண்டு தமிழ் விழா 11/08/2014 அன்று கடலூரில்  அரங்கு நிறைந்து பங்கேற்றோர் மனம் நிறைந்து சீரோடும், சிறப்போடும் நடைபெற்றது. 

தோழர்.சீனிவாசன் தலைமையேற்க, தோழர்.லோகநாதன் அனைவரையும் வரவேற்றார். அறக்கட்டளையை செவ்வனே நடத்தும் பணியை  பல ஆண்டுகளாக தன் சிரம் மேல் தாங்கிய கட்டளையாகக் கொண்டு சிறப்புடன் பணிபுரிந்த தோழர்.SRC அவர்களின் பணியை முன்னாள் மாவட்டச்செயலர் தோழர்.சுந்தரமூர்த்தி அவர்களும் சங்கு இலக்கியச்சிற்றிதழின் ஆசிரியர் தோழர்.வளவ.துரையன் அவர்களும் பெருமை பொங்க எடுத்துரைத்தனர். இட்ட பணியை இதயம் சுமந்து மேற்கொண்டதை தோழர்.SRC எடுத்துரைத்தார். 

தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பொதுமேலாளர் திரு.சந்தோஷம் அவர்கள் மிகுந்த சந்தோசத்துடன் பரிசளித்து பாராட்டுரை வாசித்தார். மேலும் கடலூர் தோழர்கள்.செந்தில்குமரன்,  சதாசிவம், காரைக்குடி மாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

கேட்போர் மயங்க கேளாதோர் ஏங்க  வேட்ப மொழியும் AITUC மாநிலத்தலைவர் திருப்பூர் தோழர்.சுப்பராயன் அவர்களின் கருத்தாழமிக்க உரை காலத்தின் குரலாய் செவிமடுத்தோர் மனங்களில் நிறைந்தோடியது. 

சான்றோர்கள் , சம்மேளனச்செயலர் தோழர்.ஜெயராமன், தோழர்.கு.ப., தோழர்கள்.அன்பழகன்,ஆனந்தன் என பலர் அரங்கத்திற்கு அணி சேர்த்தனர்.  அலைகள் ஆர்ப்பரித்தாலும் அவை யாவும் கடலுக்குள்.. கடலூருக்குள் அடக்கம்.. 

முத்தமிழின் பெருமை போற்றிய 
சிரில் அறக்கட்டளை 
சிரஞ்சீவித்தமிழாய்.. வாழ்க..வளர்க... 

No comments:

Post a Comment